இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவசர அனுமதி தேவை: Pfizer நிறுவனம்

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும்  ஃபைசர் தனது தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விரும்புகிறது. ஃபைசர் இப்போது பிரிட்டன் மற்றும் பஹ்ரைனுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவரசர அனுமதி தேவை என கோரியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2020, 01:56 PM IST
  • கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஃபைசர் தனது தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த விரும்புகிறது.
  • பைசர் இப்போது பிரிட்டன் மற்றும் பஹ்ரைனுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவரசர அனுமதி தேவை என கோரியுள்ளது
  • டி.ஜி.சி.ஐ என்பது இந்தியாவில் மருத்துவ பரிசோதனை மற்றும் அவசரகால தடுப்பூசி பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கும் ஒரு நிறுவனம் ஆகும்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவசர அனுமதி தேவை: Pfizer நிறுவனம்  title=

புதுடில்லி: ஒருபுறம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி அதன் இறுதி கட்ட பரிசோதனையில் உள்ளது, மறுபுறம், ஃபைசர் தனது தடுப்பூசியை இந்தியாவுக்கு கொண்டு வர தயாராக உள்ளது.

பிரிட்டனில் தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், கொரோனா வைரஸ் தடுப்பூசி (Corona vaccine) தயாரிக்கும் ஃபைசர் இப்போது இந்தியாவிலும் அனுமதி கோரியுள்ளது. கோவிட் -19 தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ஃபைசரின் இந்திய பிரிவு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் (DGCI) கோரியுள்ளது.

 டிசம்பர் 4, 2020 அன்று, ஃபைசர் நிறுவனம் டி.ஜி.சி.ஐ.க்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி தடுப்பூசியை அனுமதிக்குமாறு கடிதம் எழுதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்ய அனுமதி வேண்டும் என்று ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) தனது கடிதத்தில் கோரியுள்ளது. நிறுவனத்தின் தடுப்பூசி ஏற்கனவே பிரிட்டன் மற்றும் பஹ்ரைனில் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, 

கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பாளர் நிறுவனம் ஃபைசர் (Pfizer) இந்தியாவில் தடுப்பூசியை விற்க மட்டுமல்ல, தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையையும் நடத்த விரும்புகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகளின் 2019 (Drugs and Clinical Trials Rules 2019) கீழ் இந்தியர்களுக்கு இந்த தடுப்பூசி கொடுத்து  மருத்துவ பரிசோதனை செய்யவும் ஃபைசர்-பயோன்டெக் நிறுவனம் ஒப்புதல் கோரியுள்ளது.

கடந்த புதன்கிழமை ஃபைசரின் கோவிட் -19 (COVID-19)  தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த பிரிட்டன் ஒப்புதல் அளித்தது. பிரிட்டனுக்கு பிறகு வெள்ளிக்கிழமை ஃபைசர்-பயோன்டெக் தடுப்பூசிக்கு பஹ்ரைன் ஒப்புதல் அளித்தது.

ALSO READ |  கனடா தலைமையிலான கூட்டத்தை புறக்கணிக்க இந்திய முடிவு

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News