தென் தமிழகத்தின் விருதுநகர் தொகுதி நட்சத்திய தொகுதியாக தற்போது கவனம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும், ராதிகா சரத்குமாரும் களத்தில் நிற்பது தான்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குத்துயிரும், கொலை உயிருமாக ஆக்கியதற்காக ஓபிஎஸ் தனித்து விடப்பட்டுள்ளார் என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார்.
திமுகவை எதிர்ப்பதற்கு தமிழகத்தில் அதிமுக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் வலிமை இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எடப்பாடி பழனிசாமி வலுவாக இருந்தால் அண்ணாமலை இருக்கும் இடமே தெரியாம போயிருப்பார் என கூறினார்.
தான் வெற்றி பெற்றால் அடுத்த 45 நாட்களுக்குள் கோவையில் போதைப்பொருள் தடுப்பு அலுவலகத்தைக் கொண்டுவருவேன் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழக முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலையில் உள்ளதாக தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கட்சியின் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Nirmala Sitharaman: தான் ஏன் மக்களவை பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு காரணங்களை கூறி விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பாஜகவுக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்று ஏ.சி.சண்முகம் கூறி உள்ளார்.
கோவையில் அதிமுக - பாஜகவுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
புகழ் பெற்ற நீலகிரியை கூகுலில் தேடினால் 2-ஜி ஊழல்தான் வருகிறது. நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அந்த அளவிற்கு அவமானப்படுத்தியுள்ளார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் பேட்டி.
நீலகிரி தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய லேட்டாக எல்.முருகன் வந்ததால் அதிமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக தடியடி நடத்தி காவல்துறை கூட்டத்தை கலைத்தது.
Lok Sabha Elections: தமிழகத்தில் நேர்மையான கட்சி என்றால் அது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான். மூப்பனார் நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை குடும்ப கட்சிகள் செய்த சதியால் இழந்து விட்டார்: அண்ணாமலை
பாஜக தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதை முன்னிட்டு சாய் பாபா கோயிலில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.