குடி போதையில் வந்த வெற்றி..சக்திக்கு செம ஷாக்! மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடந்தது என்ன?

Meenakshi Ponnunga Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2023, 12:25 PM IST
  • ஜீ தமிழின் பிரபல சீரியல், மீனாட்சி பொண்ணுங்க.
  • இந்த தொடரில், மீனாட்சி உயிருடன் வருகிறாள்.
  • அனைவரும் அதிர்ந்து போகின்றனர்.
குடி போதையில் வந்த வெற்றி..சக்திக்கு செம ஷாக்! மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடந்தது என்ன?  title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

முந்தைய எபிசோட்..

மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நேற்றைய எபிசோடில், பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு இறந்து விட்டதாக சொன்ன மீனாட்சி உயிருடன் இறங்குகிறாள். இதைப்பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  பஞ்சாயத்தில் புஷ்பாவின் பணத்தை தந்து விடுகிறேன் எனவும், யமுனாவை தன்னுடனேயே அழைத்துப் போகிறேன் என்று கூறிவிட்டு மூன்று பெண்களுடன் மீனாட்சி வீட்டிற்கு போகிறாள். 

Meenakshi Ponnunga

மறுபக்கம் மீனாட்சி எப்படி உயிருடன் வந்தால் என்று புஷ்பா சங்கிலியை கேட்க அவள் எப்படி தப்பினாள் புரியவில்லை என்று கூற, அவளை விடக்கூடாது என்று புஷ்பா கூறுகிறாள். பிறகு மீனாட்சி வீட்டில் விளக்கேற்றி மூன்று பெண்களையும் நல்ல முறையில் வாழ வைப்பேன் என சாமி கும்பிடுகிறாள். மீனாட்சியை காப்பாற்றியதால் சக்தி தன்னை பாராட்டுவாள் என்று காத்துக் கொண்டிருந்த வெற்றியிடம் சக்தி அம்மா உயிருடன் இருப்பதை ஏன் கூறவில்லை நாங்கள் துக்கத்தில் இருந்தோம் என்று கூறி வெற்றியை அறைகிறாள்.  நான் கோபித்துக் கொண்டு போய் விடுவேன் என்று வெற்றி சொல்ல சக்தி நீ போ என்று சொல்ல வெற்றி உண்மையிலேயே கோபித்துக் கொண்டு போய் விடுகிறான். இப்படி பரபரப்பான திருப்பத்துடன் முடிந்த இத்தொடரில், இன்று நடக்கவுள்ள விஷயங்கள் என்ன தெரியுமா? 

மேலும் படிக்க | சிறுவயதிலேயே சினிமா-இசைப்புயலின் உறவினர்..ஜி.வி.பிரகாஷ் குறித்த அறியாத தகவல்கள் இதோ..!

இன்றைய எபிசோட்..

மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் மீனாட்சி மூன்று பெண்களுக்கும் சாப்பாடு ஊட்டி விடுகிறாள். ஒரு போன் பூத்துக்குள் நான் இருக்கும் போது ரவுடிகள் தீ வைத்து விட அங்கிருந்து தப்பி வர அப்போது ரவுடிகளிடமிருந்து காப்பாற்றியது வெற்றி தான் என்று கூறுகிறாள்.

Meenakshi Ponnunga

இதையடுத்து நான் இங்கே உயிருடன் வந்ததற்கு வெற்றி தான் காரணம், அவனுக்கு நியாயமாக நாம் விருந்து வைக்க வேண்டும் என்று சொல்லி சக்தியிடம் வெற்றியை அழைத்து வரச் சொல்கிறாள்.  சக்தி வெற்றியை அழைத்து வர செல்ல வெற்றி நண்பர்களுடன் குடித்து விட்டு சக்தியை பாட்டு பாடச் சொல்லி வெறுப்பேற்றிக் கிண்டல் செய்கிறான். நான் குடித்திருக்கிறேன் விருந்துக்கு வரமாட்டேன் என்று சொல்லி, மயங்கி விழுகிறான். பிறகு சக்தி திரும்பி வந்து மீனாட்சியிடம் வெற்றி விருந்துக்கு வரவில்லை அவன் குடித்துவிட்டு மயக்கத்தில் இருக்கிறான் என்று சொல்ல மீனாட்சி அதிர்ச்சி அடைகிறாள்.

காணத்தவறாதீர்கள்..

குடித்துவிட்டு வந்த வெற்றி..அதிர்ச்சியில் மீனாட்சி..இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கமலின் 10 கேரக்டர்கள்-விஷ்ணுவின் 10 அவதாரங்கள்..’தசாவதாரம்’ படத்தில் ஒளிந்துள்ள ரகசியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News