ட்ரெண்டில் உள்ள முன்னணி கதாநாயகிகள் திருமணம் செய்துகொண்டபோது என்ன வயது தெரியுமா?

தமிழ் திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு தனது புதிய வாழ்கை பயணத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். திரை உலகின் நட்சத்திர பட்டாளங்கள் ஒன்று திரண்ட நயன்தாராவின் திருமண நிகழ்வு உலக அளவில் பேசப்பட்டுள்ளது. தனது 37வது வயதில் விக்னேஷ் சிவனை கரம் கோர்த்துள்ள நயன்தாரா இன்றும் திரைத்துறையில் கொடிகட்டி பறக்கும் நடிகையாகவே வலம் வந்துகொண்டு இருக்கிறார். பெண்களுக்கு 25 வயதிற்குள் திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் மத்தியில் திரைத்துறையில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் இந்த வயது வரம்போ அல்லது சர்ச்சை கருத்துக்களோ எடுபடாதது ஏன் என்பது கேள்வி குறிதான். அந்த வகையில் சில நடிகைகளின் திருமண வயது குறித்து பார்க்கலாம். 

1 /7

தற்போது நயன்தாரா, தனது 37வது வயதில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டுள்ளார். காதல் ஜோடிகளாக உலகம் முழுவதும் வலம் வந்துகொண்டிருந்த இவர்கள் தற்போது புதுமன தம்பதிகளாக உள்ளனர்.  

2 /7

நடிகை சாயிஷா, இவர் மற்ற நடிகைகளுக்கு மாற்றாக தனது 21வது வயதில் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொண்டார். 

3 /7

நடிகை நஸ்ரியா, இவர் தனது 19வது வயதிலேயே நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்டார். இளைஞர்களின் கியூட் குயினாக வலம் வந்த இவர்தான் மிக குறைந்த வயதில் திருமணம் செய்துகொண்ட சமீபத்திய நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.  

4 /7

நடிகை ஸ்ரேயா சரண், இவர் தனது 36வது வயதில் ரஷ்யாவை சேர்ந்த தனது நண்பரான ஆண்ட்ரே கோஷீவை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார். திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானபோதுதான் ஸ்ரேயாவுக்கு திருமணம் நடைபெற்ற தகவல் வெளியானது.  

5 /7

நடிகை சமந்தா, இவர் தனது 30வது வயதில் நாக சைதன்யாவை மிக பிரமாண்ட நிகழ்வுகளுடன் திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

6 /7

நடிகை ஜோதிகா தனது 29வது வயதில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டார். இருவரும் மிக பொருத்தமான ஜோடிகளாகவே வலம் வந்துகொண்டு இருக்கிறார்கள். 

7 /7

நடிகை காஜல் அகர்வால், இவர் தனது 35வது வயதில் கவுதம் கிச்சாலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில்தான் இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பின் காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதிலேயே கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.