எப்போ பார்த்தாலும் தூக்கமே வருதா? உஷார்..!

sleepiness : எப்போது பார்த்தாலும் மதியம் தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் இருக்கிறதா? அந்த உணர்வுக்கு பின்னால் இருக்கும் காரணங்கள் தெரியாமல் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள். 

sleepiness : ஒரு சிலருக்கு மதியம் வந்தாலே தூக்கம் தானாக வந்துவிடும். தூங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என தோன்றும். அப்படி தோன்றுவதும் ஒருவகையான பிரச்சனை தான். 

1 /9

பொதுவாக வேலைக்கு செல்லும்போது மதிய நேரங்களில் தானாகவே தூக்கம் வந்துவிடும். அப்படி தூக்கம் வந்தால் சோர்வும் சேர்ந்தே வந்துவிடும். இதற்கு சில வாழ்வியல் காரணங்கள் இருக்கின்றன. இதுபோன்று தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.   

2 /9

ஒழுங்கற்ற தூக்க சுழற்சி - இரவில் தாமதமாக தூங்குவது மற்றும் காலையில் தாமதமாக எழுந்திருப்பது உங்கள் தூக்க சுழற்சியை பாதிக்கும்.   

3 /9

தவறான உணவுப் பழக்கம் - பொரித்த உணவுகளை அதிகமாக உண்பது, காஃபின் மற்றும் மதுபானங்களை அதிகமாக உட்கொள்வதும் மதியம் தூக்கத்தை ஏற்படுத்தும்.  

4 /9

மன அழுத்தம் - பணிச்சுமை, குடும்பப் பிரச்சனைகள் மற்றும் பிற மன அழுத்த சூழ்நிலைகளும் பிற்பகல் தூக்கத்தை ஏற்படுத்தும்.  

5 /9

குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது - உடலில் தண்ணீர் இல்லாததால், ஒருவர் சோர்வாகவும் சோம்பலாகவும் உணர்கிறார்.

6 /9

சில மருந்துகளின் பக்க விளைவுகள் - சில மருந்துகள் தூக்கத்தையும் ஏற்படுத்தும்.

7 /9

தூக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி? - தினமும் இரவில் சரியாக தூங்கி எழவும். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். காபி ஆல்ஹகால் குடிப்பதை தவிர்க்கவும்.

8 /9

காலை வெயிலில் சிறிது நேரம் உட்கார்ந்து இருப்பது உங்கள் மனநிலையை மேம்படுத்துவதோடு தூக்கத்தையும் குறைக்கும். மதியம் நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால், நீங்கள் 20-30 நிமிடங்கள் சிறிய தூக்கம் எடுக்கலாம்.

9 /9

உடற்பயிற்சி - தவறாமல் உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் மற்றும் உங்களை அதிக ஆற்றலுடன் உணர வைக்கும். மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, தியானம் செய்யவும்.