17 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி; 70 அடி ஆழத்துக்கு சென்ற குழந்தை சுஜித்

சுஜித்தை பத்திரமாக மீட்க மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் 30 மீட்டர் ஆழத்திற்கு சென்ற சுஜித், இப்போது 70 அடி ஆழத்தில் விழுந்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2019, 10:45 AM IST

Trending Photos

17 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி; 70 அடி ஆழத்துக்கு சென்ற குழந்தை சுஜித் title=

திருச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் தை மீட்க 17 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நேற்று மாலை குழியில் விழுந்த குழந்தையை மீட்க மீட்புக் குழுக்கள் போராடி வரும் வேளையில், குழந்தை மேலும் ஆழத்திற்கு சென்றது. தற்போது 70 அடி ஆழத்தில் குழந்தை சுஜித் சென்றுள்ளார். அவரை மீட்பது பெரும் சவாலாக உள்ளதாக மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

தற்போது குழந்தையிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. முன்னதாக குழந்தைக்கு தொடர்ந்து பொற்றோர் மற்றும் உறவினர் மூலம் ஆறுதல் கூறப்பட்டு வந்தது. குழந்தையும் பதில் அளித்து வந்தது. ஆனால் இப்பொழுது எந்தவித பதிலும் வராததால், அனைவரும் கவலை அடைந்துள்ளனர். 

நேற்று வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை தவறி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படை, மருத்துவ குழு, வட்டாட்சி வருவாய் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர்.

Trending News