CCD நிறுவன அதிபர் VG.சித்தார்த்தா உடல் நேத்ராவதி நதியில் கண்டெடுப்பு!

காணாமல் போன காஃபி டே நிறுவன அதிபர் VG. சித்தார்த்தா உடல் மங்களூருவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது!!

Last Updated : Jul 31, 2019, 08:02 AM IST
CCD நிறுவன அதிபர் VG.சித்தார்த்தா உடல் நேத்ராவதி நதியில் கண்டெடுப்பு! title=

காணாமல் போன காஃபி டே நிறுவன அதிபர் VG. சித்தார்த்தா உடல் மங்களூருவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது!!

பெங்களூரூ: காஃபி டே நிறுவன அதிபர் VG. சித்தார்த்தாவின் உடல் புதன்கிழமை (இன்று) மங்களூரில் உள்ள ஹோய்கே பஜார் அருகே நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் திங்கள்கிழமை இரவு காணாமல் போயிருந்ததால், உல்லால் பாலத்தில் இருந்து குதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கர்நாடகாவின் சிக்மகளூருவில் பிறந்து மங்களூரு பல்கலைக்கழத்தில் தனது கல்விப் படிப்பை நிறைவு செய்தவர் சித்தார்த்தா. பங்குச்சந்தை தரகு நிறுவனம் ஒன்றில் ஒரு பயிற்சியாளராகத் தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து பங்குச்சந்தை வர்த்தகத்தில் தேர்ந்த சித்தார்த்தா 1984 ஆம் ஆண்டு தனது திறமையால் சிவன் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தை முன்னணி பங்கு தரகு நிறுவனமாக உருவாக்கினார்.

1992 ஆம் ஆண்டு வாக்கில்தான் சித்தார்த்தா முதன்முதலாக காஃபி தொழிலில் கால் பதித்தார். 'பீன் கம்பெனி ட்ரேடிங்’ எனப் பெயரிடப்பட்டு தொடங்கிய நிறுவனம்தான் இன்றைய கஃபே காஃபி டே. காஃபி கொட்டைகளைப் பிரித்து எடுப்பதிலிருந்து தூளாக ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தொழில் வளர்ந்து 2018 ஆம் நிதியாணடில் 2,061 கோடி ரூபாய் தொழில் நிறுவனமாக கஃபே காபி டே மாறியது.

இந்தியாவின் முதல் காஃபி கஃபே மாடலைத் தொடங்கியவர் சித்தார்த்தா. 1996 ஆம் ஆண்டு பெங்களூருவில் முதல் கஃபே காஃபி டே தொடங்கப்பட்டது. இன்று இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வியன்னா, செக் குடியரசு, மலேசியா, நேபாளம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் கஃபே காஃபி டே கிளைகள் திறக்கப்பட்டு வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு சித்தார்த்தாவின் தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் நடைபெற்ற வருமான வரி சோதனையின் பின்னரே அவரது சோதனைக் காலம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. 60 வயதான அவர் திங்கள்கிழமை 6 மணி முதல் இரவு 8 மணி வரை காணாமல் போனார். அவர் இன்னோவாவில் சக்லேஷ்பூர் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மங்களூரு நோக்கி திரும்புமாறு டிரைவரிடம் கேட்டார். பின்னர் நேத்ராவதி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் அருகே இறங்கி காணாமல் போனார்.

அவர் காணாமல் போன சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் மீட்கப்பட்டது. அங்கு அவர் “சிறந்த முயற்சிகள்” இருந்தபோதிலும் “சரியான வணிக மாதிரியை உருவாக்கத் தவறிவிட்டார்” என்று தீர்ப்பளித்தார். வணிகத்தைப் பொறுத்தவரையில் நிதிக் கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டி, அவர் “நிலைமைக்கு ஆளாகிறார்” என்று அவர் கூறினார். 

இந்நிலையில், 60 வயதான பிரபல காஃபி டே நிறுவன அதிபர் VG. சித்தார்த்தாவின் உடல் புதன்கிழமை (இன்று) மங்களூரில் உள்ள ஹோய்கே பஜார் அருகே நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த தொழிலதிபர் திங்கள்கிழமை இரவு காணாமல் போயிருந்ததால், உல்லால் பாலத்தில் இருந்து குதித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

 

Trending News