தேவஷாயணி ஏகாதசி: எப்படி வழிபடுவது! விவரம் உள்ளே!

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 23, 2018, 04:41 PM IST
தேவஷாயணி ஏகாதசி: எப்படி வழிபடுவது! விவரம் உள்ளே! title=

ஏகாதசி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கும். இந்த நாட்கள் பொதுவாகத் "திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன.

அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி ஏகாதசி ஆகும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் பதினோராவது நாளாக வருவதால் இந்த நாள் ஏகாதசி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இதில் தேவஷாயணி ஏகாதசி ஜகன்னாதர் ரத் யாத்ராவுக்குப் பிறகு வரும், இந்த தேவஷாயணி ஏகாதசி விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

இந்து ஐதீகத்தின் படி இந்த தேவஷாயணி ஏகாதசியில் விஷ்ணு பகவான் உறங்குவார் என்றும் நான்கு மாதங்கள் கழித்து தனது உறக்கத்திலிருந்து எழுவார் என்று நம்பப்படுகிறது.

ஏகாதசி பூஜை நேரம்:-

24th ஜூலை, பூஜை நேரம் - 06:16 AM to 08:51 AM
பூஜை நேரம் முடிவு - 6:25 PM

ஏகாதசி திதி ஆரம்ப நேரம் - 2:47 PM on 22/ஜூலை/2018
ஏகாதசி திதி முடிவு நேரம் - 4:23 PM on 23/ஜூலை/2018

Trending News