வயாகரா போட்டாலும் பிரச்சனை, போடவில்லை என்றாலும் பிரச்சனை -என்ன செய்வது?

Viagra problems : பாலியல் ஆசைக்கு ஆண்களுக்கு வயகாரா போட்டாலும் பிரச்சனை போடவில்லை என்றாலும் பிரச்சனையாக இருப்பதால், என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 20, 2024, 08:47 AM IST
  • வயாகரா எடுத்துக் கொள்கிறீர்களா?
  • பின்னால் வரும் பெரிய பிரச்சனைகள்
  • மருத்துவரின் ஆலோசனை கட்டாயம் அவசியம்
வயாகரா போட்டாலும் பிரச்சனை, போடவில்லை என்றாலும் பிரச்சனை -என்ன செய்வது? title=

மோசமான வாழ்க்கை முறையால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்கள் தான். இதனால் பாலியல் வாழ்க்கையில் சொல்லமுடியாத பின்விளைவுகளை ஆண்கள் எதிர்கொள்கிறார்கள். இன்றைய சூழலில் இளம் தலைமுறையினர் ஆண்மை குறைபாடு உள்ளிட்ட பாலியல் சார்ந்த பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக விறைப்புதன்மை பிரச்சனை எதிர்கொள்ளும் ஆண்கள், அதனை ஈடு செய்துகொள்ள வயாகரா மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். இதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கிறது.

வயாகரா மாத்திரைகளை ஏன் எடுத்துக் கொள்கிறார்கள்?

இளம் தலைமுறை இளைஞர்கள் பாலியல் ஆசை நீண்ட நேரம் இருக்க வேண்டும் என்பதற்காக வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். தங்களால் படுக்கையில் அதிகநேரம் நீடிக்க முடியாது என சிலர் அவர்களாகவே நினைத்துக் கொண்டு முன்முடிவின் அடிப்படையில் இந்த மாத்திரைகளை நாடுகின்றனர். மன அழுத்தம், பதட்டம், பயம் காரணமாக பாலியல் ஆசைக்கு எடுத்துக் கொள்ளும் இந்த மாத்திரைகள் அவர்கள் எதிர்பார்க்கும் விளைவுகளை கொடுப்பதில்லை என்றால் உடனே வயாகரா மாத்திரைகளின் அளவை 50 மில்லி கிராமில் இருந்து 300 மில்லி கிராம் வரை படிப்படியாக அதிகரித்துக் கொள்கின்றனர். இது அவர்களுக்கு ஓரளவு திருப்தியை கொடுக்கிறது. பெண்ணின் ஆசையையும் திருப்திபடுத்தியதாகவும் இளைஞர்கள் மன நிம்மதி அடைகின்றனர். 

மேலும் படிக்க  | இந்தியாவின் முதல் உலக பணக்காரர், முகேஷ் அம்பானியை விட 50 மடங்கு சொத்து - யார் இவர்?

வயாகரா மாத்திரைகளால் வரும் பிரச்சனைகள்

ஆனால், ஆண்மை குறைபாட்டுக்கு வழிவகுக்கும் வயாகரா மாத்திரைகள் விறைப்புதன்மை பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது. இதுதவிர மோசமான ஆரோக்கிய பின்விளைவுகளையும் இந்த மாத்திரைகளை கொண்டு வருகின்றன. ரத்த அழுத்தம், ரத்த கட்டிகளை உருவாக்குதல், நரம்பு பிரச்சனைகள்  எல்லாம் வரிசையாக வரத் தொடங்குகிறது. இதனால் மாரடைப்புகள் கூட ஏற்படுகிறது. மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்ளும் இத்தகைய மாத்திரைகள் எப்போதும் உயிருக்கு ஆபத்தானவை தான். 

உங்களுக்கு பாலியல் பிரச்சனை இருப்பதாக நினைத்தால் நீங்களாகவே மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து உரிய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள். முறையான நிவாரணம் கிடைக்கும். உங்களின் முன் முடிவின் அடிப்படையில் வயகாரா மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் குறைந்த நாட்கள் மட்டுமே பாலியல் ஆசைகள் நிறைவேறும், வாழ்க்கை முழுவதும் பிரச்சனைகளையே எதிர்கொள்ள நேரிடும். 

மேலும் படிக்க | நைட் ஷிப்ட்டில் வேலை பார்ப்பதால் ஆண்மை குறையுமா? என்னங்க சொல்றீங்க..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News