சுமங்கலிப் பிரார்த்தனை- செய்முறை எப்படி! ஒரு பார்வை!

சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்களுக்கு முன்னர் செய்வது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 23, 2018, 03:48 PM IST
சுமங்கலிப் பிரார்த்தனை- செய்முறை எப்படி! ஒரு பார்வை! title=

சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்களுக்கு முன்னர் செய்வது.

சுமங்கலிப் பிரார்த்தனைக்கு நல்ல நாள் மற்றும் கிழமைகள் பார்க்க வேண்டும். கரிநாளாக இருக்கக் கூடாது. ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிப் பெண்களை உட்கார வைத்து சாப்பாடு போட்டு வணங்குவது தான் சுமங்கலிப் பிரார்த்தனை. 

வீட்டில் உள்ள பெண்களுக்கு, கல்யாணத்திற்கு முன்னரும் , மகனுக்கு செய்யும்போது , வீட்டிற்கு மருமகள் வந்த பிறகும் இதைச் செய்வது வழக்கம். மகள் போன்ற உறவுகளை சுமங்கலிப் பிரார்த்தனையில் முக்கியமாக உட்கார வைக்க வேண்டும். இவர்களைத் தவிர, வேறு சுமங்கலிப் பெண்கள் யாராவதும் உட்காரலாம். ஆனால், மருமகள் உறவில் உள்ளவர்கள் உட்காரக் கூடாது.

இந்த சுமங்கலிப் பிரார்த்தனை மூன்று விதமாக நடைபெறும். எல்லாரும் பின்பற்றும் வழக்கமான முறையில் சுமங்கலி இலையின் படையலைச் சேர்த்து ஐந்து பேர், அல்லது ஒன்பது பேரை அழைத்துச் சாப்பாடு போடுவார்கள். 

இந்த இலை போடுவதும் சில வீடுகளில் இரட்டை இலை போடுவார்கள்.  இரண்டு புடைவைகள் வைப்பார்கள். சில வீடுகளில் ஒரே இலை தான். ஒரே புடைவைதான். இதெல்லாம் குடும்ப வழக்கத்தைப் பொறுத்தது. ஆனால் பொதுவாக ஒற்றைப்படையிலேயே சுமங்கலிகளின் எண்ணிக்கை அமையும். இன்னொன்று பூவாடைப் பொண்டுகள் என்பது.
 
சுமங்கலிப் பிரார்த்தனை வழிமுறை:-

முதல் நாளே, புடவைகளை, மடியாக உலர்த்தவும். (புதுப் புடவையை அப்படியே கொடுப்பதாக இருந்தாலும், முதலில் அவர்கள் மடிப் புடவை தான் கட்டிக் கொள்ள வேண்டும்). 

அந்த நாளில், காலையில், நலுங்கு வைத்து, மஞ்சள், குங்குமம், பூ வைத்து, தலையில் எண்ணெய் வைத்து, சீகக்காய் பொடி இவற்றைக் கொடுத்து விடவும். சமையலும் குடும்ப வழக்கப்படி செய்ய வேண்டும். பின் காலில் மஞ்சள் பூசி, ஜ லம் விட்டு அலம்பி, உள்ளே அழைத்து வர வேண்டும்.

பின் ஒரு மணையில் கோலம் இட்டு, அதில் கொடுக்க வேண்டிய ஒரு புடவை மட்டுமாவது, அப்படியே மடித்து வைக்காமல், கொசுவி, அதனுடன் ஒரு ப்ளவுஸ் பிட் வைத்து, அதன் மீது, நிறைய மஞ்சள், வெற்றிலை, பாக்கு, குங்குமம், பூ, கண்மை,சிறிய கண்ணாடி, தேங்காய், பழம், மருமகளின் சில நகைகள் இவற்றை வைக்க வேண்டும்.

பின், அனைவரும் வெளியே சென்று விடவேண்டும். அந்தக் கதவை மூடி விட வேண்டும். ஒரு 5 நிமிடம் கழித்து, கையைத் தட்டிக்கொண்டு உள்ளே செல்ல வேண்டும். பின் படத்தின் மீது, பூ, அட்சதை போட்டு, நமஸ்காரம் செய்து விட்டு,பெண்டுகள் சாப்பிட வேண்டும். அதன் பிறகு, அவர்களுக்கு உரிய உடைகளைக் கொடுத்து அவர்களை நமஸ்காரம் செய்து விட்டு, பிறகு, சாப்பிட வேண்டும்.

Trending News