ரவுடி காந்தாராவின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் ரங்கநாயகி! செம டிவிஸ்ட்

Meenakshi Ponnunga Latest Update:ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி.. ஷக்தி கொடுத்த வாக்கு, சிக்கி தவிக்கும் வெற்றி - மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 21, 2023, 02:18 PM IST
  • ரங்கநாயகி கொடுத்த அதிர்ச்சி...
  • ஷக்தி கொடுத்த வாக்கு, சிக்கி தவிக்கும் வெற்றி
  • மீனாட்சி பொண்ணுங்க எபிசோட் அப்டேட்.

Trending Photos

ரவுடி காந்தாராவின் நெற்றியில் துப்பாக்கியை வைக்கும் ரங்கநாயகி! செம டிவிஸ்ட் title=

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபலமான தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது.

பெண்கள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கருவாகும். தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்‌ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

மீனாட்சி பொண்ணுங்க நேற்றைய எபிசோட்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில், ரங்கநாயகி மீனாட்சிக்கு சவால் விட்டார். அவன் எனக்கு மகனா உங்க வீட்டு மாப்பிள்ளையா என்று பார்த்துவிடலாம் என்ற சவாலுக்கு என்ன பதில்? இன்றைய எபிசோட் இது.

மேலும் படிக்க | என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்

ரங்கநாயகி மீனாட்சி வீட்டில் இருக்கும் வெற்றியிடம் ஒரு பெண் என்னை மிரட்டி கெடு கொடுத்திருக்கிறாள்.  அந்த ரவுடி பெண்ணை அடிக்க வேண்டும் என்று சொல்ல மீனாட்சி வெற்றியிடம் சண்டை எல்லாம் தேவையில்லை என்று சொல்ல மீனாட்சிக்கும் ரங்கநாயகிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. ரங்கநாயகி கோபத்துடன் போய். விடுகிறாள்.

அடுத்ததாக சக்தி வெற்றியிடம் அடிதடிக்கு எல்லாம் போகாமல் இருந்தால் நான் உனக்கு முத்தம் தருகிறேன் என்று சொல்ல
மார்க்கெட்டில் அடியாட்களுடன் பெண் ரவுடி காந்தாரா காத்துக் கொண்டிருக்க வெற்றி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இருந்து கொண்டு சண்டைக்கு போகாமல் அமைதியாக இருக்கிறான். 

புஷ்பாவும் சங்கிலியும் ரங்கநாயகிக்காக சண்டை போட்டு வெற்றி போலீசில் மாட்டி கொள்வான் என நினைத்து ஏமாற்றம் அடைகின்றனர். ரங்கநாயகி ரவுடி காந்தாரா இருக்கும் இடத்திற்கு வந்து அவள் நெற்றியில் துப்பாக்கியை வைக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News