அரசு ஊழியர்களுக்கு Good News.. கோரிக்கைகளுக்கு தீர்வு -முதலமைச்சர் உத்தரவு

Tamil Nadu Latest News: தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காக நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது.

Tamil Nadu Government Employees News: தமிழக அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

1 /5

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுக்கான நான்கு அமைச்சர்கள் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் நலன் கருதி குழுவை அமைத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். 

2 /5

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுக்கான நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைக்கப்பட்ட இந்த குழுவில், அமைச்சர்கள் எ.வா. வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். 

3 /5

அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் நாளை பேச்சுவார்த்தையை நடத்த இருக்கிறார்கள். 

4 /5

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளைப் பரிசீலித்து, அவற்றின் மீது தேவையான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த குழு அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

5 /5

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காக நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது.