தினசரி 100 ரூபாய் இருந்தால் போதும், நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர்

இன்றைய உலகில் கோடிஸ்வரன் ஆக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கும். கோடீஸ்வரராவதற்கு வெவ்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய எல்லோரும் நினைக்கிறார்கள். கோடீஸ்வரர் ஆவது கடினம் அல்ல. இதற்கு வழக்கமான முதலீடு (Investment) மற்றும் நல்ல சேமிப்பு (Saving) தேவை. இதுபோன்ற ஒரு Investement பற்றி இங்கே காண்போம்.

1 /4

நீண்ட கால முதலீடு கோடீஸ்வரராக மாற நீண்ட காலம் முதலீடு செய்வது அவசியம். பணவீக்க விகிதம், செலவினம் மற்றும் மருத்துவ சேவைகளுக்கான செலவினங்களை மனதில் வைத்து முதலீட்டைத் தொடங்க வேண்டும். இருப்பினும், முதலீட்டிற்கான சில Instrumart உள்ளன, அவை தொடர்ந்து உங்கள் முதலீட்டை அதிகரிக்கும். இந்த Instrumart-ல் பணத்தை முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் தொடர்ந்து உங்கள் பணமதிப்பை அதிகரிக்கலாம் மற்றும் மில்லியனராக மாறுவதை எளிதாக்கலாம்.

2 /4

எது சிறந்த வழி வரி மற்றும் முதலீட்டு நிபுணர்களின் கூற்றுப்படி, தங்கள் சொந்த முதலீட்டில் கோடி ரூபாய் சம்பாதிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (Mutual Fund) சிறந்த வழி. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நபர் 30 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால், அவருக்கு அடுத்த 30 வருடங்களுக்கு தொடர்ந்து முதலீட்டு வாய்ப்பு உள்ளது. அவர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளின் பங்கான முதலீட்டு திட்டத்தில் (எஸ்ஐபி - SIP) முதலீடு செய்ய வேண்டும்.

3 /4

படிநிலை விகிதத்தை வைத்திருப்பது அவசியம் டிரான்ஸெண்ட் கன்சல்டன்ட்டின் செல்வ மேலாண்மை இயக்குனர் கார்த்திக் ஜாவேரி கூறுகையில், ஒருவர் 30 ஆண்டுகளாக 15 சதவீத வருவாயுடன் (தோரையமாக) பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்தால் விரைவில் அவர் கோடீஸ்வரராக முடியும். ஏனெனில், இந்த 30 ஆண்டுகளில், நிலையான 15 சதவிகிதத்துடன் காம்பௌண்டிங் நன்மையையும் அவர்கள் பெறுவார்கள். மேலும், ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும் 10 சதவீத படிநிலை வீதத்தையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். இது அவர்களின் சேமிப்பு தொகையை கோடியாக உயர்த்தும்

4 /4

ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே முதலீடு ஒவ்வொரு நாளும் 100 ரூபாயை எஸ்ஐபியில் (SIP) முதலீடு செய்யுங்கள். உங்கள் முதலீட்டு இலக்கை 30 ஆண்டுகளாக அமைக்கவும். ஆண்டுக்கு 10 சதவிகித படிநிலை வீதத்தை சேர்க்க வேண்டும். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் முதிர்வு தொகை ரூ .4,50,66,809 ஆக இருக்கும். இந்த வழியில், படிநிலை விகிதத்தின் தந்திரத்தைப் பயன்படுத்தி நீங்கள் கோடீஸ்வரராக முடியும் என்றார்.