பகீர் தகவல்! தொட்டாலே உயிரை பறிக்கும் மிக ஆபத்தான 5 செடிகள், பூக்கள்..!!

மரங்களும் செடிகளும் மனித வாழ்வின் ஆதாரமாக கருதப்படுகிறது. அவை அழகைத் தருவது மட்டுமல்லாமல், சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனையும் வழங்குகின்றன. நாம் உண்ணும் உணவுக்கான ஆதாரமாகவும் உள்ளன. ஆனால் சில தாவரங்கள் உயிரை பறிக்க கூடியவை. சில நொடிகளிலேயே இறப்பை ஏற்படுத்தும் சில விஷ செடிகள் மற்றும் பூக்களை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

1 /5

Hogweed என்று பெயரிடப்பட்ட தாவரம் Heracleum mantaegium என்று அழைக்கப்படுகிறது மற்றும் அதன் பூ மிகவும் விஷமானது. அதன் பூவை யாராவது தொட்டாலே உடலில் காயங்கள் ஏற்படும். மேலும், இது சருமத்தில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஹாக்வீட் பூக்கள் தோல் புற்றுநோயையும் ஏற்படுத்தும்.

2 /5

உலகின் மிக நச்சு தாவரங்களில் அகோனிட்டமும் ஒன்று. தாவரத்தின் இலைகள் மற்றும் வேர்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை. அதனை தொட்டாலே ஒரு நபரின் இதயத் துடிப்பு நின்று விடக் கூடும். தாவரத்தின் வேரில் இருக்கும் விஷம் நேரடியாக மூளையைத் தாக்குகிறது. அதை யாராவது தவறுதலாக சாப்பிட்டால் அவரது மரணம் நிச்சயம்.

3 /5

Ricinus comunis (Ricinus) புதர் வகை செடி மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. இது ரிசின் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புதர் மனித உடலில் உள்ள செல்களை அழிக்கும் திறன் கொண்டது. இதன் காரணமாக, முதலில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும். 

4 /5

புளோரிடா மற்றும் கரீபியன் தீவுகளில் காணப்படும், மான்கினில் தாவரமும் மிகவும் ஆபத்தானது. இது ஹிப்போமேன் மான்சினிலா என்றும் அழைக்கப்படுகிறது. செடியின் மீது விழும் நீரை யாராவது தொட்டால் அவரது உயிர் போய்விடும். இந்த செடியை எரித்த பிறகு, ஏற்படும் அதன் புகை கண்களை குருடக்கும். இதனுடன், அவருக்கு சுவாச நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

5 /5

ஆபத்தான தாவரங்களின் பட்டியலில் அப்ரின் என்ற தாவரமும் உண்டு. இது ஒரு சிவப்பு பெர்ரி போல தோற்றமளித்தாலும், அது ஒருவரைக் கொல்லும் விஷம் கொண்டது. அதன் பழங்களின் விதைகள் மிகவும் ஆபத்தானவை. ஒருவன் விதையை சாப்பிட்டால் இறப்பு நேரிடலாம்.