பணிக்கு திரும்பும் அனுஷ்கா விராட் கோலி in pics

அனுஷ்கா சர்மா மும்பையில் ஒரு பிராண்டுக்கான படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு மீண்டும் தனது பணியைத் தொடங்கினார். பச்சை வண்ண ஆடை அணிந்து படபிடிப்புக்கு வந்த அனுஷ்கா ஷர்மாவை கேமராக்கள் அனைத்தும் படம் எடுத்துத் தள்ளின.  

அனுஷ்கா சர்மா மீண்டும் மும்பைக்கு நடிக்க வந்துவிட்டார். ஏழு மாத கர்ப்பிணியான அனுஷ்காவின் வயிறு நன்றாக பெரியதாக உள்ளது. ஆனாலும், தனது கடமையை முடித்துக் கொடுப்பதற்காக மும்பைக்கு வந்துவிட்டார் அனுஷ்கா ஷர்மா. கருவுற்றிருக்கும் அனுஷ்கா மும்பையின் பல்வேறு ஸ்டுடியோக்களில் ஏழு நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்வார்.

"அனுஷ்கா படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் தோற்றமளித்தார், உண்மையில், அவர் மீண்டும் பணிக்கு வருவதில் மகிழ்ச்சியடைந்தார் என்பதை பார்த்தாலே தெரிந்த்து.  செட்டில் இருப்பதை எப்படித் தவறவிடுகிறேன் என்று அங்கிருந்த அனைவருக்கும் அனுஷ்கா சொல்லிக் கொண்டிருந்தார். கொரோனா காலமாக இருந்தாலும், கருவுற்றிருக்கும் அனுஷ்கா கவலையின்றி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார். தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் உறுதியாக நம்பியதாக விளம்பர படப்பிடிப்புக் குழுவில் இருந்த ஒருவர் தெரிவிக்கிறார்.  

1 /5

அனுஷ்கா தனது முதல் குழந்தையை பிரசவித்த நான்கு மாதங்களுக்குப் பிறகு, மே மாதம் முதல் முழு அளவிலான பணிகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 /5

அனுஷ்காவுடன் பணியாற்றும் குழுவினர் முழு பாதுகாப்புடன்...

3 /5

தேவதைகள் மண்ணின் இறங்கினால் எப்படி இருக்கும்? இதோ, உதாரணம்....

4 /5

தாய்மை பூரிப்புடன் கடமையும் சேர்த்து கலக்கும் அனுஷ்கா....

5 /5

தற்போது தனது பெற்றோருடன் அதிக நேரத்தை செலவிடுகிறார் அனுஷ்கா...தாயாகும்போது, சேயாக இருப்பதன் முக்கியத்துவம் புரிகிறது....