புதுக்கோட்டையில் 3 திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது!

Last Updated : Jun 9, 2017, 02:07 PM IST
புதுக்கோட்டையில் 3 திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது! title=

புதுக்கோட்டையில் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் திறப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கட்டடத்தை திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், திறப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியண்ண அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகிய 3 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விழாவில் கலந்து கொள்ள புறப்பட்டு கொண்டிருந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களையும் கைது செய்ததாக எம்.எல்.ஏ. ரகுபதி தெரிவித்தார். 

புதுக்கோட்டை பிருந்தாவனம் சந்திப்பில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Trending News