பப்ஜி மதனுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்..!

தேவைப்பட்டால் பப்ஜி மதனை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - Dayana Rosilin | Last Updated : Apr 6, 2022, 03:29 PM IST
  • குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனு
  • பப்ஜி மதனுக்கு சிகிச்சை வழங்க அனுமதி
  • வழக்கு விசாரணை 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
பப்ஜி மதனுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்..! title=

ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல்,   ஆபாசமாக பேசுதல்,  தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால்,  அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க  சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் தரப்பு தாக்கல் செய்த  ஆட்கொணர்வு மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதுபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது ஒரு சாதாரண வழக்கு எனவும் இதற்காக மதன் 9 மாதங்களாக சிறையில் இருப்பதாகவும் வாதிட்டார்.

மேலும் படிக்க | ஐஐடி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு! ஜாமீனில் வந்த முன்னாள் மாணவர்!

மேலும், மதனுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாக கூறிய அவர், காவல்துறையினர் மதனுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை வழங்காமல் வெறுமனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவதாகவும் வாதிட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், அரசால் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில் VPN தொழில்நுட்பம் மூலம் குற்றவாளி அதனை அத்து மீறி பயன்படுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும், பப்ஜி விளையாட்டின்போது, மதன் பேசிய வார்த்தைகள் பேச்சுரிமையின் கீழ் வராது என குறிப்பிட்ட நீதிபதிகள், மதனின் இந்த செயலால், மற்றவர்கள் தவறான பாதையில் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.  பின்னர், மதனுக்கு தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

மேலும் படிக்க | ரயில் முன் குதித்த சிறுவனை பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்! வைரல் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News