இரட்டை இலை யாருக்கு? அக்., 31 வரை கெடு!

Last Updated : Sep 15, 2017, 01:01 PM IST
இரட்டை இலை யாருக்கு? அக்., 31 வரை கெடு! title=

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதிமுக எம்பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு உள்ள அணிக்கே இரட்டை இலை சின்னத்தை வழங்க வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை இன்று விசாரித்த கோர்ட் இரட்டை இலை யாருக்கு என்பதை குறித்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

Trending News