நீங்க பாதீங்களா?: உலகத்திலேயே விலை உயர்ந்த ஓட்கா பாட்டில்!

டென்மார்க் நகரத்தில் இருந்த உலகிலேயே விலை மதிப்புள்ள ஓட்கா பாட்டில் கொள்ளை போயியுள்ளது.

Last Updated : Jan 6, 2018, 12:21 PM IST

Trending Photos

நீங்க பாதீங்களா?: உலகத்திலேயே விலை உயர்ந்த ஓட்கா பாட்டில்! title=

டென்மார்க் தலைநகர் கோபன்ஹகனில் பிரையன் இங்க் பெர்க் என்பவருக்கு சொந்தமான மது பார் உள்ளது. இங்கு உலகிலேயே மிக விலை உயர்ந்த வோட்கா மது பாட்டிலை அவர் வைத்திருந்தார்.

அதன் மதிப்பு ரூ.8 கோடியே 50 லட்சமாகும். அந்த பாட்டில் வெள்ளை மற்றும் தங்க நிற மஞ்சள் நிறத்தால் ஆனது. அதன் மூடியில் ரஷியாவின் இம்பீரியல் கழுகு முத்திரை உள்ளது. அதன் மீது விலை உயர்ந்த வைரம் பதிக்கப்பட்டுள்ளது.

அதில், வைரம், தங்கம், வெள்ளி,ஆகியவற்றால் செய்யப்பட்டுள்ளதாம். தினமும் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்படும் இந்த ஓட்கா பாட்டிலை கடைசியாக பார் மூடும் வேளையில் பாரின் உரிமையாளர் அறையில் பூட்டி வைத்துள்ளார். இந்நிலையில் நடு இரவில், ஓட்கா பாட்டில் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த திருடன் ஒருவன், அறையை திறந்து விலையுர்ந்த ஓட்கா பாட்டிலை திருடி சென்றுள்ளான். 

இந்தக் காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளன. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டென்மார்க் காவல்துறையினர், திருடனை பிடிப்பதற்கான தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். 8 கோடி மதிப்புள்ள இந்த ஓட்கா பாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் 3 சீசனில் இடம்பெற்றது.

Trending News