42,000 அடி உயரத்தில் நிகழ்ந்த ஆச்சர்யம்!

Last Updated : Apr 10, 2017, 10:20 AM IST
42,000 அடி உயரத்தில் நிகழ்ந்த ஆச்சர்யம்! title=

42,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் நஃபி டியாபி என்ற பெண் ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

துருக்கி விமானத்தில், இஸ்தான்புல் சென்று கொண்டிருந்தார் ஏழு மாத டியாபி என்ற கர்ப்பிணி பெண்க்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. விமானப் பணிப் பெண்கள், உடனடியாக அவருக்கு பிரசவம் பார்த்தனர். நீண்ட நேரம் வலியால் அவதிப்பட்ட டியாபி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். 

விமானத்தில் பறந்துக்கொண்டே உலகுக்கு வந்த அந்த குட்டிக் பெண்ணின் புகைப்படங்களை ’வேல்கம் ஓன் போர்டு ப்ரின்ஸ்எஸ்’ என்று துருக்கி ஏர்லைன்ஸ் டிவிட்டரில் பகிர்ந்துள்ளது. வானத்தில் பிறந்த பெண் குழந்தையை விமானப் பணிப்பெண்கள் பாசமுடன் கொஞ்சும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்!

Trending News