ஆக்ஸிஜன் உபகரணங்கள் இறக்குமதி மீதான வரிகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு

பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளதால், அதை தீர்க்க மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 24, 2021, 04:47 PM IST
  • பல்வேறு மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளதால், அதை தீர்க்க மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.
  • தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த்துள்ளது.
ஆக்ஸிஜன் உபகரணங்கள் இறக்குமதி மீதான வரிகள் நீக்கம்: மத்திய அரசு அறிவிப்பு title=

இந்தியா முழுவதும், கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கி, தீயாய் தொற்று பாதிப்புகள் பரவி வருகிறது. நாடு முழுவதும், முன்பு எப்போதும் இல்லாத வகையில்,  தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை எழுந்துள்ளதால், அதை தீர்க்கும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. மேலும் ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலைகள் உள்ள மாநிலங்களில் இருந்து தேவைப்படும் மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஆக்ஸிஜன் தொடர்பான மாநிலங்களின் தேவைகளை மனதில் கொண்டு,  அவற்றை விரைவில், மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்க, ரயில்வே மற்றும் விமானப்படையை திறம்பட பயன்படுத்துவதில் மத்திய அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஆக்ஸிஜன் தடையில்லாமல் கிடைக்க செய்யும் முக்கிய முயற்சியாக,  ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பான பொருட்களின் இறக்குமதி மீதான கலால் வரியை மத்திய அரசு மூன்று மாதங்களுக்கு நீக்கியுள்ளது. ஆக்ஸிஜன் உற்பத்தி தொடர்பான பொருட்களை வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆக்ஸிஜன் இறக்குமதி மீதான கலால் வரி, சுகாதர செஸ் வரி ஆகியவற்றை மூன்று மாதங்களுக்கு நீக்குவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ALSO READ | #BREAKING: மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: மத்திய அரசு அரசு அறிவிப்பு
 

தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், மாநில அரசாங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக தரப்படும் என மத்திய அரசு அரசு அறிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மே ஒன்றாம் தேதியிலிருந்து, 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருக்கும் நிலையில், மாநில அரசாங்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக தரப்படும் என மத்திய அரசு அரசு அறிவித்துள்ளது.

ALSO READ | கொரோனா காலத்தில் உங்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 மருத்துவ கருவிகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News