Diabetes Diet: இரத்தத்தில் சர்க்கரை அளவை மாயமாய் கட்டுப்படுத்தும் சஞ்சீவினி!

நீரிழிவு நோயாளிகள். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், கடுமையான உடல் நல பாதிப்புகளை எதிர் கொள்ள நேரிடலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 3, 2022, 02:45 PM IST
  • பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது.
  • மாறிவரும் வாழ்க்கைமுறையில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
  • ஒருமுறை சர்க்கரை நோய் வந்தால், வாழ்நாள் முழுவதும் நம் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது.
Diabetes Diet: இரத்தத்தில் சர்க்கரை அளவை மாயமாய் கட்டுப்படுத்தும் சஞ்சீவினி! title=

சமீபகாலமாக மாறிவரும் வாழ்க்கைமுறையில், பெரும்பாலான மக்கள் நீரிழிவு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். ஒருமுறை சர்க்கரை நோய் வந்தால், வாழ்நாள் முழுவதும் நம் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற நிலை உள்ளது. உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் நீரிழிவு நோயை முற்றிலுமாக அகற்றுவதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தாலும், இன்று வரை அதில் வெற்றி பெற முடியவில்லை, இருப்பினும் ஆரோக்கியமான உணவுகளை தவறாமல் சாப்பிடுவதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க முடியும். பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு நாவல் பழம் அருமருந்தாக இருக்கும் என பரிந்துரைக்கிறார்கள், ஏனெனில் இந்த நோயாளிகளுக்கு இது ஒரு சூப்பர்ஃப்ரூட் ஆக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இதில் ஜம்போலின் என்ற கலவை உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும்.

பரம்பரை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் சர்க்கரை வியாதி ஏற்படுகிறது. நாவல் பழம் சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு குறைபாட்டை குணமாக்கும் ஒரு சிறந்த பழம் நாவல் பழம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைகட்டுப்படுவதோடு, நாவல் பழம் பல்வேறு நோய்களுக்கு மாமருந்தாக உள்ளது. பித்தத்தைத் தணிக்கும், மலச்சிக்கலைக் குணப்படுத்தும், இதயத்தை சீராக இயங்கச் செய்யும். ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும். சிறுநீரகத்தில் ஏற்படும் வலியையும் நிவர்த்தி செய்யும் என இதன் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும். 

நாவல் பழத்தில் நார்ச்சத்து, புரதம், கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி போன்ற முக்கியமான சத்துக்கள் காணப்படுவதாக, இந்தியாவின் பிரபல உணவியல் நிபுணர் டாக்டர் ஆயுஷி யாதவ் தெரிவித்தார். நாவல் பழத்தின் விதையில் ஜம்போலைன் என்ற குளூக்கோசைட் அதிக அளவில் உள்ளது. இதன் செயல்பாடு உடலுக்குள் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாடு தடுக்கப்படுகிறது. நாவல் பழத்தின் விதைகளை இடித்து எடுக்கப்பட்ட தூளை தினமும் ஒரு கிராம் வீதம் காலையிலும், மாலையிலும் தண்ணீருடன் கலந்து உட்கொண்டால், நீரிழிவு நோய் அதிசயத்தக்க வகையில் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

நாவல்பழச்சாற்றை தினமும் மூன்றுவேளை தவறாமல் உட்கொண்டு வந்தால் நீரிழிவு நோயாளியின் சர்க்கரையின் அளவு 15 நாட்களில் பத்து சதவிகிதம் குறைத்துவிடலாம். மூன்று மாதத்திற்குள் முற்றிலும் கட்டுப்படுத்திவிடலாம் என்கின்றனர் வல்லுநர்கள். 

நாவல் பழத்தை சாலட், ஜூஸ் அல்லது சமைத்து உணவாக என பல வகைகளில் சாப்பிடலாம் என்றாலும், நாவல் பழத்தை அப்படியே உட்கொள்வதால், ஆரோக்கிய நலன்களை முழுமையாக பெறலாம். இதில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு, எடையையும் குறைக்கும்..

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.) 

மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News