உயிர் கொல்லி நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா; இந்த காய்கறிகளை டயட்டில் சேர்க்கவும்

தினமும் அதிக வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், புற்று நோய் போன்ற பல கொடிய நோய்களில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 12, 2022, 11:26 AM IST
  • புற்றுநோய் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது
  • கொழுப்பைக் குறைப்பதில் நன்மை பயக்கும்.
  • பல கொடிய நோய்களில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம்.
உயிர் கொல்லி நோய்களில் இருந்து தப்பிக்க வேண்டுமா; இந்த காய்கறிகளை டயட்டில் சேர்க்கவும் title=

தினமும் அதிக வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த காய்கறிகளை சாப்பிட்டு வந்தால், புற்று நோய் போன்ற பல கொடிய நோய்களில் இருந்து தப்பித்து ஆரோக்கியமாக வாழலாம். 

பச்சை காய்கறிகள் நம் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிப்பதுதோடு மட்டுமல்லாமல், உடல் பருமன், பற்களில் ஏற்படும் புற்றுநோய், இரத்த சோகை மற்றும் சிறுநீரக கற்களை நீக்கும் சிறந்த மருந்தாகவும் விளங்குகின்றன. பச்சைக் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் உள்ளன. அதிலும் சில குறிப்பிட்ட பச்சைக் காய்கறிகள் நிச்சயம் டயட்டில் இருக்க வேண்டும். பாகற்காய், வெந்தயக் கீரை, பிற கீரை வகைகளை உணவில் தினமும் சேர்ப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.

இன்றைய வாழ்க்கை முறையில், புற்று நோய் என்பது ஒரு பொதுவான உடல் பிரச்சனையாகிவிட்டது. இது போன்ற பல கொடிய நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பினால், இந்த பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், பச்சைக் காய்கறிகளில் கரையக்கூடிய நார்ச்சத்து, இரும்பு, தாதுக்கள் மற்றும் கால்சியம் உள்ளது, இது புற்றுநோய் போன்ற நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

இவை புற்று நோய் போன்ற உயிர் கொல்லி நோய்கள், உங்களை அண்டாமல் இருக்கச் செய்வதோடு, உங்கள் சருமம், கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும்.  எனவே நீங்கள் தினமும் உங்கள் உணவில் பச்சை காய்கறிகளை சேர்க்க வேண்டும்.

பாகற்காய், வெந்தயக் கீரை போன்ற பச்சைக் காய்கறிகளில் லேசான கசப்பு இருக்கும். இருப்பினும், அத்தகைய காய்கறிகளில் கால்சியம் அதிகமாகக் காணப்படுகிறது. அவை எலும்புகள் மற்றும் பற்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. உங்கள் பற்கள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க விரும்பினால், கண்டிப்பாக இந்த காய்கறிகளை சாப்பிடுங்கள். வேகவைத்த கீரை அல்லது பச்சையாக மென்று சாப்பிடுவதன் மூலம் பையோரியா மற்றும் வாய் துர்நாற்றத்தைப் போக்கலாம்.

மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை

கொழுப்பைக் குறைப்பதில் நன்மை பயக்கும்

இன்றைய காலக்கட்டத்தில், அனைவருக்கும் ஜின் செல்ல போதுமான நேரம் இருப்பதைல்லை. சிலர் கடுமையான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் என்றாலும் பலன் இருப்பதில். என்ன தான் உடற்பயீற்சி செய்தாலும், உங்கள் உணவில் கவனம் செலுத்தாவிட்டால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியாது. மாறாக, நீங்கள் சில பிரச்சனைகளால் சூழப்படுவீர்கள், குறிப்பாக உடல் பருமனில் இருந்து விடுபட, கீரை வகைகள், குறிப்பாக வெந்தயக் கீரை போன்ற பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், பச்சைக் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் உங்கள் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது, மேலும் உடலின் கெட்ட கொழுப்பைக் கரைக்கவும் உதவியாக இருக்கும்.

மேலும், சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க, பச்சை காய்கறிகள் அவசியம், சிறுநீரக கற்கள் போன்ற  சிறுநீரக பிரச்சனைகளை ஏற்படுத்தாது. பச்சை காய்கறிகள் கண் பார்வைக்குக்கும் நன்மை பயக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News