19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!

Last Updated : Apr 4, 2017, 09:59 AM IST
19வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!! title=

மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் 19-வது மாடியிலிருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜுன் பர்தவாஜ். மும்பையில் இருக்கும் தாஜ் லேண்ட்ஸ் எண்டு ஓட்டலில் தங்கி வந்துள்ளார். சில காலமாகவே போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த பரத்வாஜ், கடும் மனச் சோர்வுக்கு ஆட்பட்டு இருந்துள்ளார். இதனால், நேற்று மாலை 6.30 மணி அளவில், ஃபேஸ்புக் லைவின் மூலம் பேசிவிட்டு, ஓட்டலின் 19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த அர்ஜுன் பரத்வாஜ் என்ற வாலிபர் மும்பை புறநகர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ஹோட்டலின் 19-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த பரத்வாஜ்ஜை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பிரேதம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஹோட்டலில் அவர் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போலீசார், ” போதைப்பழக்கத்திற்கு அடிமையான நான் வாழ தகுதியற்றவன். எனவே, தற்கொலை செய்யப்போகிறேன்” என அவர் எழுதிவைத்த கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.

Trending News