கேரளா சம்பர்க் கிராந்தி ரயிலில் தீ விபத்து; பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

டெல்லி ரயில் நிலையத்தில் 8வது தளத்தில் நின்றுக்கொண்டு இருந்த கேரளா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டியில் தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2019, 05:51 PM IST
கேரளா சம்பர்க் கிராந்தி ரயிலில் தீ விபத்து; பயணிகள் பாதுகாப்பாக மீட்பு title=

புதுடெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் கேரளா செல்லும் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி ரயிலின் இன்ஜின் அருகே உள்ள மின்சார பெட்டியில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். நான்கு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளது. 

கேரளா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி 8வது தளத்தில் நின்றுக்கொண்டு இருந்த போது தீ சம்பவம் ஏற்ப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் மதியம் 1.57 மணிக்கு நடந்துள்ளது.

 

Trending News