திப்பு சுல்தான் பெயரை பாடப்புத்தகத்திலிருந்து நீக்க எடியூரப்பா ஆலோசனை!

திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்து எடியூரப்பா ஆலோசனை!!

Last Updated : Oct 30, 2019, 07:45 PM IST
திப்பு சுல்தான் பெயரை பாடப்புத்தகத்திலிருந்து நீக்க எடியூரப்பா ஆலோசனை! title=

திப்பு சுல்தான் குறித்த வரலாற்று விபரங்கள் அனைத்தையும் பாடபுத்தகங்களில் இருந்து நீக்குவது குறித்து எடியூரப்பா ஆலோசனை!!

திப்பு சுல்தானின் பெயரை பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து அகற்றும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா புதன்கிழமை தெரிவித்தார். "திப்பு ஜெயந்தியைப் பற்றி, நாங்கள் எல்லாவற்றையும் கைவிடப் போகிறோம். அவரைப் பற்றிய பாடப்புத்தகங்களில் உள்ள எல்லாவற்றையும் கைவிடவும் நாங்கள் யோசித்து வருகிறோம். திப்பு சுல்தான் ஒரு சுதந்திரப் போராளி என்று கூறும் நபர்களுடன் நான் உடன்படவில்லை" என்று எடியூரப்பா ANI-யிடம் கூறினார்.

"திப்பு பிறந்த நாளை நவம்பர் 10 ஆம் தேதி ஒரு மாநில விழாவாக கொண்டாட வேண்டாம் என்று நாங்கள் ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். ஏனெனில் அவர் ஒரு சர்ச்சைக்குரிய ஆட்சியாளராக இருந்தார். மேலும், பலவந்தமான மாற்றங்கள், கோயில்களை அழித்தல் மற்றும் இந்துக்களை துன்புறுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டார்" என்று அவர் மேலும் கூறினார்.

கர்நாடகாவில் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து வருடந்தோறும் நவம்பர் மாதம் 10-ந்தேதி திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க அரசு அமைந்துள்ள நிலையில், திப்பு ஜெயந்தி விழா ரத்து செய்யப்படுகிறது என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. விராஜ்பெட் எம்.எல்.ஏ கேஜி போபையா எடியூரப்பாவுக்கு திப்பு ஜெயந்தி விழாவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். இதன் அடிப்படையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

திப்பு சுல்தானின் குறிப்புகளை வரலாற்று பாடப்புத்தகங்களில் இருந்து நீக்க பாஜக எம்எல்ஏ அப்பாச்சு ரஞ்சன் முன்மொழிந்தது குறித்து மூன்று நாட்களில் அறிக்கை கோரி கர்நாடக பாடநூல் சங்கத்தின் நிர்வாக இயக்குநருக்கு அக்டோபர் 28 அன்று கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

பாஜக எம்.எல்.ஏ ரஞ்சனிடமிருந்து ஒரு கடிதம் வந்ததையடுத்து அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்தார். அதில் திப்பு பாடப்புத்தகங்களில் சுதந்திர போராட்ட வீரராக தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் தவறான வரலாற்றை படிக்கக்கூடாது என்றும் கூறினார். "திப்பு தனது நிலப்பரப்பை விரிவுபடுத்துவதற்காக கோடகு, மங்களூரு மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வந்தார். மக்களை தனது மதத்திற்கு மாற்றுவதற்காகவும், தனது ராஜ்யத்தை உயர்த்துவதற்காகவும் அவர் இங்கு வந்தார்," என்று அவர் கூறினார். 

 

Trending News