பாக்., தாக்குதலில் மரணமடைந்த இராணுவ வீரர் சுரேஷ்!

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்கியதில் வீரமரணம் அடைந்த பி.எஸ்.எப்.,வீரர், தமிழகத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.  

Last Updated : Jan 18, 2018, 11:27 AM IST
பாக்., தாக்குதலில் மரணமடைந்த இராணுவ வீரர் சுரேஷ்! title=

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் நேற்று பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மற்றொரு வீரர் மற்றும் கிராம மக்கள் காயமடைந்தனர். 

இந்நிலையில், வீரமரணம் அடைந்தவர் பிஎஸ்எப் 78-வது பட்டாலியனில் பணிபுரிந்த தமிழகத்ததில் தர்மபுரி மாவட்டம் பண்டார செட்டிபட்டியை சேர்ந்த சுரேஷ் என தெரியவந்துள்ளது. கடந்த 1976-ல் பிறந்த அவர், 1995-ல் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்தார்.

 

Trending News