ராஜஸ்தான்: பாகிஸ்தான் உளவாளி கைது

Last Updated : Aug 19, 2016, 04:07 PM IST
ராஜஸ்தான்: பாகிஸ்தான் உளவாளி கைது title=

ராஜஸ்தானில் பாகிஸ்தானை சேர்ந்த உளவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

நந்தலால் மகாராஜ் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவர் பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் எல்லையில் உள்ள முனாபோ என்ற பகுதிக்கு முறையான பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 

எல்லைப் பகுதியில் உள்ளூர் வாசிகளுடன் உள்ள தொடர்பு குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் உளவாளி எல்லைக்கு செல்வதற்கு உதவியர்கள் யார் என்பதை விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்திய எல்லையில் உள்ள ஜெய்சல்மர் பகுதி மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு வெளிநாட்டினர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களும் சிறப்பு அனுமதி பெற்று தான் இங்கு செல்ல வேண்டும். இங்கு பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending News