சானிட்டைசருக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்தது மத்திய அரசு!!

விலை உயர்வை தடுக்க சானிட்டைஜர் மற்றும் மாஸ்க்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்தது மத்திய அரசு. 

Last Updated : Mar 22, 2020, 03:56 PM IST
சானிட்டைசருக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்தது மத்திய அரசு!! title=

விலை உயர்வை தடுக்க மத்திய அரசு சானிட்டைசர்களுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்., 

கைகளுக்கு பயன்படுத்தும் சானிட்டைசர்கள் 200 மில்லி பாட்டிலை, ரூ. 100-க்கு அதிகமாக விற்க வேண்டும். மேலும் அடுக்கு கொண்ட அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மாஸ்க் அதிகபட்சமாக ரூ. 8-க்கும், 3 அடுக்குகளைக் கொண்ட மாஸ்க் அதிகபட்சமாக ரூ. 10-க்கும் விற்பனை செய்ய வேண்டும். 

இந்த விலைக் கட்டுப்பாடு ஜூன் மாதம் 30-ம் தேதி வரை இருக்கும். அத்தியாவசியப் பொருட்களான இவற்றின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News