உங்களிடம் இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

பல ஆண்டுகளாக ஆன்லைன் ஏலம் நடந்து வரும் நிலையில், பழைய மற்றும் அரிய நாணயங்கள், நோட்டுகளை ஆன்லைனில் மாற்றி பல கோடி ரூபாய் பெற்று வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 27, 2021, 04:18 PM IST
உங்களிடம் இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம் title=

புதுடெல்லி: உங்களிடம் 5 ரூபாய் நோட்டு இருந்தால் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கில் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். ஆம்!! இது உண்மைதான். அதன்படி வீட்டில் அமர்ந்த படியே லட்சாதிபதி ஆக விரும்பினால், இந்த செய்தி உங்களுக்காக மட்டுமே. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லட்சக்கணக்கான ரூபாய் எப்படி ஈட்டுவது என்று பாப்போம். 

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள இந்த நோட்டு  இந்தியாவின் மிக அபூர்வ நோட்டு (Rare Rupee Notes) எனலாம். அத்தகைய சூழ்நிலையில், இந்த ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி. தற்போது, ​​பல இணையதளங்களில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதும் விற்பதும் அமோகமாக நடந்து வருகிறது. உங்கள் பழைய நோட்டுகள் இருந்தால், பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளின்படி அதற்கு நீங்கள் நல்ல பணத்தைப் பெறலாம்.

ALSO READ | இந்த 10 ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால், நீங்களும் பணக்காரர் ஆகலாம்

பழைய 5 ரூபாய் நோட்டை ஆன்லைனில் மாற்றி லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயி ஒருவர் டிராக்டர் ஓட்டும் புகைப்படம் மற்றும் அதில் 786 அச்சிடப்பட்ட ரூ.5 நோட்டு உங்களிடம் இருந்தால், சில இணையதளங்களில் 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்லைன் ஏலம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது, மேலும் பழைய மற்றும் அரிய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை ஆன்லைனில் மாற்றுவதன் மூலம் மக்கள் பல கோடி ரூபாய் பெற்று வருகின்றனர். அதன்படி eBay போன்ற இணையதளங்களில் பழைய நாணயங்களை எளிதாக ஏலம் விடலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள 5 ரூபாய் நோட்டின் சுத்தமான புகைப்படம் உங்களிடம் இருந்தால், அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 ரூபாய் நோட்டின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவுடன் ஏலத்திற்கான செயல்முறை தொடங்கும். 

மெக்கா மதீனாவின் 1018 ஆண்டுகள் பழமையான நாணயம் 2.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாணயத்தில் மக்கா மதீனாவின் படம் செய்யப்பட்டு 786 என்றும் பொறிக்கப்பட்டிருந்தது. அதேபோல் மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்தின் நாணயமும் ரூ.50 லட்சத்துக்கு விற்கப்பட்டது. அந்த நாணயத்தில் துர்க்கையின் உருவம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ \ இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News