சந்திர கிரகணம் 2022: இந்த ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட காற்று வீசும்

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 17, 2022, 03:23 PM IST
சந்திர கிரகணம் 2022: இந்த ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட காற்று வீசும்  title=

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.  இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் சந்திர கிரகணம் 16 மே 2022 அன்று நிகழ உள்ளது. 

மே 16-ம் தேதி இந்த சந்திர கிரகணம் விருச்சிக ராசியில் கிரகணம் ஏற்படுகிறது. இது தவிர அன்று விசாக நட்சத்திரம். இந்த சந்திர கிரகணத்தின் நாளில் உருவாகும் கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும்.

இந்த ராசிக்காரர்களுக்கு சந்திரகிரகணம் சாதகமாகும்

மேஷம்: இந்த சந்திர கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு நிறைய பாக்கியங்களை பொழியும். குறிப்பாக இந்த நேரம் அவரது தொழிலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்களும் முன்னேற்றம் அடைவார்கள், பணமும் இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த நிலை சாதகமாகும். மரியாதையும் கிடைக்கும். முதலீடு செய்வதற்கும் இது நல்ல நேரமாக இருக்கும்.

மேலும் படிக்க | மே 2022 மாத ராசி பலன்: மேஷம் முதல் கடகம் வரை

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சந்திர கிரகணம் மிகவும் சிறப்பாக அமையும். இவர்களுக்கு வேலையில் பலமான பலன்கள் கிடைக்கும். அவர்கள் பதவி உயர்வு பெறலாம். வருமானம் கூடும். பணம் சாதகமாக இருக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணம் சாதகமான பலனைத் தரும். அவர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறலாம். வேலை செய்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள், வியாபாரிகள் பெரிய ஆர்டர்களைப் பெறுவார்கள். மொத்தத்தில், செல்வமும் பெருமையும் இந்த மக்கள் மீது பெருமழை பெய்யும். அவர்களின் பொருளாதார பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

சந்திரகிரகணம் மே 16ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் ரிஷப ராசியில் நிகழும். இருப்பினும் அது அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இந்த கிரகணத்திற்குப் பிறகு, ஸ்நானம் செய்வதும் பின்னர் தானம் செய்வதும் முக்கியம், இதனால் கிரகணத்தின் எதிர்மறை பாதிப்புகள் தவிர்க்கப்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News