பற்றி எரியும் தில்ராஜு பிரச்னை... அஜித் செய்த காரியம் - ஏகே ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய்தான் அஜித்தைவிட பெரிய ஸ்டார் என தில்ராஜு கூறியிருக்கும் சூழலில் அஜித் செய்த காரியம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Dec 16, 2022, 06:55 PM IST
  • விஜய்தான் அஜித்தைவிட பெரிய ஸ்டார் என தில்ராஜு பேசினார்
  • இதனால் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே மோதல்
  • இந்தச் சூழலில் அஜித்தின் செயல் வைரலாகியிருக்கிறது
 பற்றி எரியும் தில்ராஜு பிரச்னை... அஜித் செய்த காரியம் - ஏகே ரசிகர்கள் கொண்டாட்டம் title=

அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கலுக்கு ஒன்றாக வெளியாகிறது. இதனால் இரண்டு பேரின் ரசிகர்களும் இப்போதிருந்தே சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் அவர்களின் மோதலுக்கு தீனி போடும் வகையில் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜு தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் தமிழ்நாட்டில் வெளியாகிறது. தமிழ்நாட்டில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 800க்கும் மேற்பட்ட திரைகள் உள்ளன. நான் அவர்களிடம் எனக்கு 400க்கும் மேற்பட்ட திரைகள் தருமாறு கெஞ்சிக்கொண்டிருக்கிறேன். இது வியாபாரம்.

என் படமும் பெரிய படமாக இருக்கும் நிலையிலும் நான் திரைகளுக்காக கெஞ்ச வேண்டியிருக்கிறது. இது ஒன்றும் ஒருத்தருக்கான உரிமை கிடையாதுதானே? ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடுகிறார். விரைவில் சென்னைக்கு சென்று அவரிடம் எனக்கு கூடுதல் திரைகளை ஒதுக்குமாறு கேட்கப்போகிறேன். நடிகர் விஜய், அஜித்தை விட பெரிய ஸ்டார்” என கூறினார்.

அவரது இந்தப் பேச்சு கடும் விமர்சனத்தை சந்தித்துவருகிறது. மேலும் அஜித் ரசிகர்கள் தில்ராஜுவை சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், “அஜித்குமார் உலக சுற்றுப்பயணத்தில் முதல் கட்டமாக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பைக்கில் பயணத்தை நிறைவு செய்துள்ளார். பைக்கில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு இது ஊக்கமாக அமையும்” என பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தை கண்ட அஜித் ரசிகர்கள்; வாரிசு தயாரிப்பாளர் திரையரங்குகளுக்காக கதறிக்கொண்டிருக்க எங்கள் ஏகே அவர் வழியில் சுற்றிக்கொண்டிருக்கிறார். அவர் வழி எப்போதும் தனி வழி என பதிவிட்டு சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.

மேலும் படிக்க | முதலில் மகேஷ்பாபு அப்புறம்தான் விஜய் - தயாரிப்பாளர் தில்ராஜு பேச்சு... அப்போ வம்சி சொன்னது பொய்யா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News