மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3 குட் நியூஸ்: மாத சம்பளத்தில் மகத்தான ஏற்றம்

7th Pay Commission: நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியென்றால் உங்களுக்கு சில முக்கிய அப்டேட்கள் உள்ளன. இவற்றின் விவரங்களை இங்கே காணலாம். 

7th Pay Commission: இன்னும் சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 நல்ல செய்திகள் கிடைக்கும் என கூறப்படுகின்றது. டிஏ உயர்வு, டிஏ அரியர் மற்றும் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் ஆகியவற்றில் முக்கிய அறிவிப்புகள் வெளிவரக்கூடும். இந்த அறிவிப்புகளுக்காக மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள்.  முன்னதாக, ஜனவரி 2024 -இல் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 50% ஆக உயர்ந்தது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவரணத்தை அளித்தது. தற்போது 2024 ஆம் ஆண்டின் அடுத்த, அதாவது ஜூலை மாத அகவிலைப்படி உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.  வழக்கத்தை போலவே இந்த முறையும் ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படியில் ஏற்றம் இருக்கும். 

1 /9

மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை மாத அகவிலைப்படி உயர்வுக்காக காத்திருக்கிறார்கள். ஜூலை மாதம் தொடங்கிவிட்ட நிலையில், இந்த அறிவிப்புக்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகியுள்ளது. இந்த நிலையில், இது குறித்த ஒரு சமீபத்திய அப்டேட் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் டிஏ உயர்வு மட்டுமல்லாமல் இன்னும் 2 நல்ல செய்திகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2 /9

ஜனவரி 2024 -இல் ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 4% அதிகரிக்கப்பட்டது.  இதைத் தொடர்ந்து டிஏ (DA) மற்றும் டிஆர் (DR) 50% ஆக உயர்ந்தது. இது ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவரணத்தை அளித்தது.

3 /9

ஜனவரியில் அகவிலைப்படி 50% -ஐ எட்டியதால் பல கொடுப்பனவுகள் தானாகவே திருத்தப்பட்டன. 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளின் படி அகவிலைப்படி 50% -ஐ எட்டியவுடன் சில கொடுப்பனவுகள் 25% ஏற்றம் காணும். அந்த வகையில் சுமார் 13 அலவன்சுகளில் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

4 /9

தற்போது 2024 ஆம் ஆண்டின் அடுத்த, அதாவது ஜூலை மாத அகவிலைப்படி உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.  வழக்கத்தை போலவே இந்த முறையும் ஏஐசிபிஐ குறியீட்டு தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படியில் ஏற்றம் இருக்கும். இந்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

5 /9

ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் 4% அல்லது 5% அதிகரிப்பு இருக்கலாம் என கூறப்படுகின்றது. அகவிலைப்படி ஜூலையில் 4% அதிகரிக்கப்பட்டால் ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 54% -ஐ எட்டும். இதில் 5% ஏற்றம் இருந்தால், மொத்த அகவிலைப்படி 55% -ஐ எட்டும்.

6 /9

நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை ஈடுகட்ட மத்திய அரசு ஊழியரளுக்கு அகவிலைப்படி (Dearness Allowance) அளிக்கப்படுகின்றது. இது ஆண்டுக்கு இரு முறை வழங்க்கப்படுகின்றது. அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருளாதார நெருக்கட்யை சமாளிக்க ஒரு நல்ல நிவாரணமாக அமைகின்றது.

7 /9

மத்திய அரசு ஊழியரளுக்கு மற்றொரு நல்ல செய்தியும் காத்திருக்கிறது. நீண்ட நாட்களாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருகிறது. அதை அரசு இப்போது செய்யலாம் என கூறப்படுகின்றது. இது நடந்தால் தற்போதுள்ள ஃபிட்மெண்ட் ஃபாக்டர்  2.57 சதவிகிதத்திலிருந்து 3.68 சதவிகிதமாக அதிகரிக்கும். இதன் பிறகு 44% ஊதிய உயர்வு (Salary Hike) அதிகரிக்கும்.   

8 /9

இது தவிர, கொரானா காலத்தில் முடக்கப்பட்ட டிஏ அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இது நடந்தால், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். 

9 /9

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.  

Next Gallery