இரண்டாவது இன்னிங்ஸ் போல உணர்கிறேன்: லப்பர் பந்து வெற்றியால் நெகிழும் சுவாசிகா!

லப்பர் பந்து படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நடிகை சுவாசிகா, படத்தின் வெற்றி விழாவில் இது என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ் என்று தெரிவித்துள்ளார்.

 

1 /6

Lubber Pandhu: சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி வெற்றிநடை போட்டு கொண்டிருக்கும் லப்பர் பந்து படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.   

2 /6

இந்த நிகழ்ச்சியில் நடிகை சுவாசிகா பேசும்போது, 16 வருடத்திற்கு முன்பு தமிழில் நான் முதல் படம் பண்ணினேன். அப்போது பல கனவுகளுடன் இங்கே வந்தேன். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அதனால் கேரளாவுக்கு சென்று விட்டேன்.   

3 /6

இத்தனை வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் இப்படி ஒரு படம் எனக்கு கம்பேக் ஆக கிடைத்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு இரண்டாவது இன்னிங்ஸ் போல இதை உணர்கிறேன்.   

4 /6

தயாரிப்பாளர், இயக்குனர் யாருக்கும் என்னைப் பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனாலும் எப்படி என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. 16 வயதில் உடைந்து போன அந்த கனவு இப்போது மீண்டும் நனவாக துவங்கியுள்ளது.   

5 /6

இன்னும் நிறைய தமிழ் படங்கள் பண்ண வேண்டும். இங்கேயே வீடு கட்டி செட்டில் ஆக வேண்டும். இயக்குநர் தமிழரசன் இந்த யசோதா கதாபாத்திரத்தை நான் நன்றாக பண்ணி இருக்கிறேன் என படப்பிடிப்பு தளத்தில் ஒருமுறை கூட நீங்கள் சொன்னதில்லை.   

6 /6

என்னுடைய கெத்து தினேஷ் இன்று இங்கே வரவில்லை. அவருடன் ஏற்கனவே குக்கூ படத்தில் இணைந்து நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து நான் அவரது ஜோடியாக நடிக்கிறேன். அதுவும் ஒரு சந்தோஷம். எனக்கு ஒரு புதிய வாழ்க்கை கொடுத்ததற்கு மொத்த படக்குழுவிற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.