Electric Two Wheelers: பர்மிட் தேவையில்லை, வாடகைக்கு விட்டு பணம் ஈட்டலாம், விவரம் இதோ

Electric Vehicle: பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை எட்டி வரும் நிலையில், மின்சார வாகனங்கள் மக்களுக்கு சரியான மாற்றாக அமைகின்றன. இதற்கான பல நிவாரணங்களையும் அரசு அளிக்க முயற்சிக்கிறது. 

எலக்ட்ரிக் மற்றும் மெத்தனால், எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களுக்கான பர்மிட்டை விலக்குவதற்கான திட்டம் குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

1 /5

ஆகஸ்ட் 5 ம் தேதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், 'ரேட் எ கேப் திட்டம்', 1989 மற்றும் 'வாடகை மோட்டார் சைக்கிள் திட்டம்' ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கு பர்மிட் தேவையில்லை. இது சம்பந்தமாக, இந்த இரண்டு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சில மாநிலங்களில் இருந்து பிரதிநிதித்துவங்கள் வந்தன.  

2 /5

அறிவிப்பு வெளியான பிறகு, இப்போது இந்த வாகனங்களுக்கான பர்மிட்டை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதன் பொருள் இந்த வாகனங்களை பர்மிட் இல்லாமல் எந்த வகையிலும் பயன்படுத்த முடியும். அதாவது, இந்த வாகனங்களின் வணிக பயன்பாட்டிற்கு எந்த தடையும் இருக்காது. அமைச்சகத்தின் இந்த முடிவால் சுற்றுலாத் துறையும் நிவாரணம் பெறும்.

3 /5

அரசாங்கம் ஏற்கனவே மின்சார வாகனங்களுக்கு பர்மிட்டிலிருந்து விலக்கு அளித்திருந்தாலும், இரு சக்கர வாகனங்கள் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை, இது குறித்து தெளிவான அறிவுறுத்தல்கள் இல்லை. இப்போது புதிய அறிவிப்பில், இரு சக்கர வாகனங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.

4 /5

இப்போது இந்த மின்சார இரு சக்கர வாகனங்களை சட்டப்பூர்வமாக வாடகைக்கு எடுக்கலாம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம். மின்சார வாகனங்களை வாடகைக்கு விடும் டிரான்ஸ்போர்டர்களுக்கு இதில் மிகப்பெரிய நன்மை கிடைக்கும்.

5 /5

சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த முடிவு சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு பயனளிக்கும். கோவா மற்றும் பிற இடங்களைப் போலவே, மற்ற இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை வாடகைக்கு விடலாம். இதன் மூலம் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும்.