செவ்வாய் மாற்றம்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம், மகிழ்ச்சி பொங்கும்

Mars Transit: கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றத்தின் தாக்கங்கள் அனைத்து ராசிகளிலும் இருக்கும். மிதுன ராசியில் செவ்வாய் கிரகத்தின் சஞ்சாரமும், பின், அதன் வக்ர நிலை மாற்றமும் அனைத்து ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். ஜோதிடத்தின் படி, செவ்வாய் கிரகத்தின் நிலை பல ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அள்ளித் தரும். தொழிலிலும் சொந்த வாழ்விலும் வெற்றி கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, அக்டோபர் 16 ஆம் தேதி மிதுன ரசியில் செவ்வாய் கோச்சாரம் செய்தார். பின்னர் அக்டோபர் 30 ஆம் தேதி மிதுனத்தில் வக்ர நிலைக்கு, அதாவது இயல்பான நிலைக்கு எதிர் நிலையில் மாறினார். செவ்வாய் நவம்பர் 13 வரை இந்த நிலையில் இருப்பார். கிரகங்களின் ராசி மாற்றங்கள் நம் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றன. இந்த செவ்வாய் மாற்றம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என இங்கே காணலாம். 

1 /5

மேஷ ராசிக்காரர்களுக்கு முதல் மற்றும் எட்டாம் வீட்டின் அதிபதியாக செவ்வாய் உள்ளார். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பதவியும் கௌரவமும் உயரும். வருமானமும் அதிகரிக்கும். இதன் காரணமாக, இந்த நேரத்தில் தனிப்பட்ட வாழ்க்கையும் அமோகமாக இருக்கும்.

2 /5

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழாவது மற்றும் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய். இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடு லாபகரமாக முடியும். இப்போது செய்யும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாமல் கிடைக்கும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். மேலும் இந்த காலகட்டத்தில் பல நன்மைகள் உங்களை வந்து சேரும்.   

3 /5

சிம்ம ராசிக்காரர்களுக்கு நான்காம் மற்றும் ஒன்பதாம் வீட்டின் அதிபதியாக செவ்வாய் உள்ளார். இந்த காலகட்டத்தில் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நிலம் முதலியவற்றில் முதலீடு செய்வதால் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையில் அன்பு மேலோங்கும். 

4 /5

கும்ப ராசிக்காரர்களின் திறமை அதிகமாகும். இவர்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து பல வித நன்மைகளைப் பெறலாம். கும்ப ராசிக்காரர்களின் மூன்றாவது மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியாக செவ்வாய் உள்ளார். பணியிடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

5 /5

தனுசு ராசிக்காரர்கள் செவ்வாய் சஞ்சாரத்தால் பல நன்மைகளைப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். மேல் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரிபூரணம் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.