Air India one B777-ன் முதல் பயணம்: சென்னை வழியாக திருப்பதி செல்கிறார் ராம் நாத் கோவிந்த்

இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணத்தில் திருப்பதி பெருமாளின் தரிசனத்துக்காக திருப்பதி சென்றார்.

ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணமாகும் இது.

1 /6

இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணத்தில் திருப்பதி பெருமாளின் தரிசனத்துக்காக திருப்பதி சென்றார்.

2 /6

ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணமாகும் இது. இந்த விமானம் அதிகமான எரிபொருள் திறன் கொண்டது. B747-400 ஐ விட நீண்ட தூரம் பயணிக்கக்கூடியது. இவை வி.வி.ஐ.பி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த விமானம் குறைந்த சத்தத்துடன் அதிநவீன உட்புறங்களைக் கொண்டுள்ளது.

3 /6

ஏர் இந்தியா ஒன்-பி 777 இன் தொடக்க விமானத்தின் போது, ​​கோவிந்த் விமானிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப்படையின் ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டினார்.

4 /6

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை ரெனிகுண்டா விமான நிலையத்தில் ராம் நாத் கோவிந்தை வரவேற்றனர். குடியரசுத் தலைவர் காலை 10.45 மணிக்கு விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

5 /6

குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திருப்பதி வேங்கடாஜலபதி கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை மெற்கொள்வார்.

6 /6

குடியரசுத் தலைவர் கோவிந்த் ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணத்தில் டெல்லியில் இருந்து சென்னை வழியாக திருப்பதிக்கு சென்றார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, அவர் புதிய விமானத்திற்கான ஒரு சிறிய பூஜையை செய்தார்.