Video: ‘ஒரசாத’ குழுவின் அடுத்த படைப்பு ‘ராசாத்தி நெஞ்சே’!

‘ஒரசாத’ என்ற ஒற்றைப்பாடல் மூலம் கேட்பவர்களின் உள்ளங்களையும் உயிரையும் உரசிப்போனவர்கள் விவேக் - மெர்வின். 

Last Updated : Mar 22, 2019, 08:50 PM IST
Video: ‘ஒரசாத’ குழுவின் அடுத்த படைப்பு ‘ராசாத்தி நெஞ்சே’! title=

‘ஒரசாத’ என்ற ஒற்றைப்பாடல் மூலம் கேட்பவர்களின் உள்ளங்களையும் உயிரையும் உரசிப்போனவர்கள் விவேக் - மெர்வின். 

பெரிய விளம்பரங்கள் இல்லாமல் கடைக்கோடி கிராமங்கள் வரை இணையம் மூலம் சென்றடைந்த இவர்களது ஒரசாத பாடல் கடந்த 2018-ஆம் ஆண்டில் பெரும் பொருட்செலவில் உருவான திரைப்பட பாடல்க்களுக்கெல்லாம் சாவல் விட்டது.

திரையிசையில் குலேபகாவலி திரைப்படத்தில் இவர்கள் இசைத்த ‘குலேபா’ இல்லாத கல்லூரி இசை நிகழ்ச்சிகளை இப்போது பார்க்க இயலாது. அந்த அளவிற்கு இளைஞர்களில் நாடி துடிப்பை உணர்ந்து இசை அமைத்த இந்த ஜோடியின் அடுத்த படைப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

7UP Madras Gig குழுவின் பெயரில் வெளியாகும் இந்த இரண்டாவது பாடல் ‘ராசாத்தி நெஞ்சே’ என பெயரிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த பாடலின் மேக்கிங் வீடியோவினை 7UP Madras Gig குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Trending News