ADMK EX Minister மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்

பாலியல் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 16, 2021, 12:40 PM IST
  • முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி
  • முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு.
  • சென்னை நெற்குன்றத்தில் இருப்பதாக தமிழக காவல்துறையினருக்கு தகவல்
ADMK EX Minister மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் title=

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (Former AIADMK minister) மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார். மணிகண்டன் தனக்கு வாக்கு அளித்து ஏமாற்றினார், கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் நடிகை சாந்தினி (Actress Chandini). அவர் அளித்த புகாரின் பேரில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தார்கள். 

திருமணம் செய்வதாக உறுதி அளித்து ஏமாற்றியது, கொலை மிரட்டல் அளித்தது, கருக்கலைப்பு செய்ய வைத்தது என்பது போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் (M Manikandan) இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு எதிராக அவருக்கு முஞ்சாமீன் அளிக்கக்கூடாது என நடிகை சாந்தினி (Actress Chandini) தரப்பு கூறியது.

ALSO READ | CBCID Arrest: டெல்லியில் சிவசங்கர் பாபா கைது 

இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் (Madras Highcourt), ஜூன் 9 ஆம் தேதி வரை மணிகண்டனைக் கைது செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தது. இதனால் மணிகண்டனுக்கு ஒரு சிறிய நிவாரணம் கிடைத்தது. 

இந்நிலையில், இன்று மீண்டும் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கூறி, அவரது முன்ஜாமீன் மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

ALSO READ |  சினிமா நடிகை கொடுத்த பாலியல் புகார்: முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

Trending News