பாமக தலைவர்கள் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மானநஷ்ட வழக்கு!

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புபடுத்தி பேசியதாக பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் மன்னிப்பு கேட்குமாறு வழக்கறிஞர் வில்சன் மூலம் நோட்டீஸ்.

Written by - RK Spark | Last Updated : Jun 24, 2024, 09:18 AM IST
  • கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம்.
  • 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாமக தலைவர்கள் மீது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மானநஷ்ட வழக்கு! title=

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்புபடுத்தி பேசியதாக பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் மன்னிப்பு கேட்குமாறு வழக்கறிஞர் வில்சன் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீஸில் சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் மீது ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்கு மறுப்பு தெரிவித்து சட்டமன்ற உறுப்பினர்களிடமும், கள்ளக்குறிச்சி பொதுமக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதை தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளில் வெளியிட வேண்டும். மற்றும் அவர்களின் சமூக வலைதளத்திலும் பதிவிட வேண்டும் இருவரும் தலா ஒரு கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற அவதூறை நிறுத்திக் கொள்ளவும் 24 மணி நேரத்தில் பதில் அளிக்கவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை உயர்த்த வலியுறுத்துவோம்: திருப்பூர் எம்பி.சுப்ராயன்

அமைச்சர் பதவி விலக ஆர்ப்பாட்டம்

குமாரபாளையத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வலியுறுத்தி அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் எத்தனால் கலந்த  விஷ சாராயம் குடித்த, 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தினாலும், உடனடியாக தமிழக அரசு, களத்திலிறங்கி தீவிர மருத்துவ சிகிச்சை வழங்கியதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்கியது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷ சாராயம் சாவுக்கு பொறுப்பேற்று, தமிழக அரசு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் நேற்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் காவல்துறை அனுமதியின்றி நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் 16 பேரை போலீசார் கைது செய்து நகராட்சி திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு காணப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் டிடிவி தினகரன் பேட்டி

கள்ளக்குறிச்சியில் இரு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் விஷ சாராயத்திற்கு காரணம் என மக்கள் சொல்வதை தான் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாகவும், அதனால் சிபிஐ விசாரனை தான் இதற்கு சரியான நடவடிக்கையாக இருக்குமெனவும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பத்து லட்சம் அறிவிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து விடாமல் இருக்க தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் விஷ சாராயம் அருந்தி 108 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த டிடிவி தினகரன் தனக்கு வந்த தகவலின் படி 20 பேர் உடல் சீராக இல்லை என்று வந்துள்ளதாகவும் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரனகுணமடைந்து வரவேண்டும் என்றும் கள்ளச்சாரய இறப்பிற்கு முழு காரணம் ஆட்சியாளர்களின் முழு தோல்வி ஆளும் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் பொறுப்பு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தான் காரணம் என குற்றஞ்சாட்டினார்.

மேலும் படிக்க | வயிற்று பிழைப்பிற்காக சென்ற மீனவர்களை சிறை பிடித்த இலங்கை கடற்படை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News