பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த காதல் ஜோடி! காதலனின் செயலால் காதலி எடுத்த விபரீத முடிவு..

மயிலாடுதுறையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற காதல்ஜோடி பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு. காதலி எடுத்த விபரீத முடிவால் வந்த வேதனை. 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : May 10, 2024, 08:35 PM IST
  • மயிலாடுதுரையில் அதிர்ச்சி சம்பவம்
  • காதல் ஜோடி தீக்குளிப்பு
  • காரணம் என்ன?
பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த காதல் ஜோடி! காதலனின் செயலால் காதலி எடுத்த விபரீத முடிவு.. title=

மயிலாடுதுறையில் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற காதல்ஜோடி பெட்ரோல் ஊற்றி தீக்குளிப்பு. காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் மனமுடைந்த காதலி விபரீத முடிவு. படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில். போலீசார் விசாரணை.

மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ் 24 இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு  மகளிர் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வருகிறார். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்தது தொடர்பாக இருவரிடம் பிரச்சனை நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆகாஷ், சிந்துஜா ஆகிய இருவரும் பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மயிலாடுதுறைக்கு பல்சர் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்துள்ளனர். அப்போது ஆகாஷ் பழகி வரும் பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி : கல்லூரி ஆண்டு விழாவில் பஞ்ச் டையலாக் பேசிய நடிகர் பாலா

இருவரும் மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் தன்னை காதலிக்க மறுத்ததால் மனம் உடைந்த சிந்துஜா மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார். அந்த தீ இருவர் மீதும் பற்றி எரிந்துள்ளது. பலத்த தீ காயங்களுடன் கீழே விழுந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆகாஷ் 60 சதவிகிதமும், சிந்துஜா 40 சதவிகிதமும் காயம் அடைந்ததால் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் தொடர்ந்து இருவரிடமும்  மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றதை  அடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மாணவர்களுக்கு அலெர்ட் கொடுத்த அண்ணா பல்கலை., துணை வேந்தர் - என்ன விஷயம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News