வேலை வாய்பிற்காக காத்திருக்கும் இளைஞரா நீங்கள்?

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கைக்கு தமிழக அரசு சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது!

Last Updated : Jun 9, 2018, 12:27 PM IST
வேலை வாய்பிற்காக காத்திருக்கும் இளைஞரா நீங்கள்? title=

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழிற்பயிற்சி நிலையங்களின் சேர்க்கைக்கு தமிழக அரசு சார்பில் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது!

சென்னை மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதற்கு மாவட்ட அளவில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்படுள்ளனர். 

தகுதியுள்ள மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு http://www.skilltraining.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொழிற்பயிற்சி பாடப்பிரிவுகள், அவற்றில் சேர்வதற்கான கல்வித்தகுதி, இடஒதுக்கீடு போன்ற விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.06.2018 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 044-22501530 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News