China: நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மரணம்....

அதிர்ஷ்டவசமாக, மூன்று குழந்தைகள் சுவை பிடிக்காததற்காக நூடுல்ஸ் சாப்பிட மறுத்ததால் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.

Last Updated : Oct 22, 2020, 05:11 PM IST
China: நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மரணம்.... title=

புது டெல்லி: ஒரு வருடத்தில் பிரீசரில் வைக்கப்பட்டிருந்த பழமையான நூடுல்ஸை சாப்பிட்டு சீனாவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இறந்தனர். உள்ளூர் சீன (China) உணவான Suantangzi சாப்பிட்ட ஐந்து நாட்களுக்குப் பிறகு குடும்பத்தின் ஏழு உறுப்பினர்கள் அக்டோபர் 10 அன்று இறந்தனர். குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் திங்கள்கிழமை உயிர் இழந்தார்.

அதிர்ஷ்டவசமாக, மூன்று குழந்தைகள் சுவை பிடிக்காததற்காக நூடுல்ஸ் சாப்பிட மறுத்ததால் தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். இந்த சம்பவம் சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங்கில் நடந்துள்ளது. 

 

ALSO READ | கொரோனா முழு அடைப்பால் மேகி நூடுல்ஸின் தேவை அதிகரித்துள்ளதாக தகவல்...

ஒரு தனியார் செய்தித்தாள் அறிக்கையின்படி, இறந்த உறுப்பினர்கள் போங்க்கிரெக் அமில விஷத்தால் இறந்தனர், இது பெரும்பாலும் ஆபத்தானது. வயிற்று வலி, வியர்வை, பொது பலவீனம் மற்றும் இறுதியில் கோமா ஆகியவை நோயின் சில அறிகுறிகளில் அடங்கும். இது பெரும்பாலும் 24 மணி நேரத்திற்குள் மரணத்திற்கு வழிவகுக்கிறது.

புளித்த சோள மாவு கலந்து வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த நூடுல்ஸ், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஃபிரீசரில் பாதுகாக்கப்பட்டு இருந்ததாகவும், அதன் காரணமாகவே இக்குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூடுல்ஸ் விஷமாகி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ALSO READ | நீங்க நூடுல்ஸ் பிரியரா? அப்ப கண்டிப்பா இத படிங்க...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
 

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News