காபூலில் தற்கொலைப் படை தாக்குதல்: 8 பேர் பலி 25 பேர் காயம்

Last Updated : May 3, 2017, 02:26 PM IST
காபூலில் தற்கொலைப் படை தாக்குதல்: 8 பேர் பலி 25 பேர் காயம் title=

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில் கூறியது, இன்று காபூலில் அமெரிக்க தூதரக கட்டிடத்துக்கு அருகில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 8 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனினும் தாலிபன்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Trending News