YES வங்கி வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது -நிர்மலா சீதாராமன்!

தனியார் துறை கடன் வழங்குநரான YES வங்கியின் வாரியத்தை ரிசர்வ் வங்கி கையகப்படுத்திய ஒரு நாள் கழித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குறித்த வங்கியின் வைப்புத்தொகையாளர்களுக்கு அவர்களின் பணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

Last Updated : Mar 6, 2020, 02:36 PM IST
YES வங்கி வாடிக்கையாளர்கள் பணம் பத்திரமாக உள்ளது -நிர்மலா சீதாராமன்! title=

தனியார் துறை கடன் வழங்குநரான YES வங்கியின் வாரியத்தை ரிசர்வ் வங்கி கையகப்படுத்திய ஒரு நாள் கழித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குறித்த வங்கியின் வைப்புத்தொகையாளர்களுக்கு அவர்களின் பணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இதுகுறித்து தெரிவிக்கையில்., "ஒவ்வொரு வைப்புத்தொகையாளரின் பணமும் பாதுகாப்பானது என்று நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன், ரிசர்வ் வங்கியுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நிதியமைச்சர் இதுகுறித்து தெரிவிக்கையில்., "இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் எனக்கு உறுதியளித்துள்ளார். ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய அரசு இரண்டும் இதுகுறித்து கவணித்து வருகின்றன" மேலும், "ரிசர்வ் வங்கியுடன் நாங்கள் இரண்டு மாதங்களாக தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் மற்றும் நாங்கள் எல்லோருடைய விருப்பத்திலும் இருக்கும் போக்கை எடுத்துள்ளேன்." என தெரிவித்துள்ளார்.

வைப்புத்தொகையாளர்களுக்கு உறுதியளித்த அவர், தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வைப்புத்தொகையாளர்கள், வங்கி மற்றும் பொருளாதாரத்தின் நலனுக்காகவே என்றும் தெரிவித்தார்.

முன்னதாக இன்று, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், கையில் உள்ள பிரச்சினை கடன் வழங்குநருக்கு குறிப்பிட்டது மற்றும் துறை சார்ந்ததல்ல என தெரிவிதார்.

மேலும்., நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமார், YES வங்கிக்கு மறுசீரமைப்பு திட்டத்தை கொண்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தீர்மானம் "மிக விரைவில்" வரும் என்று அவர் விரிவாகக் கூறாமல் கூறினார்.

"இது ஒரு துறை சார்ந்த பிரச்சினை அல்ல, இது வங்கி துறை சார்ந்த பிரச்சினை" என்றும் அவர் குறிப்பிட்டார். "நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ரிசர்வ் வங்கி அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்." எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  • YES வங்கியின் நெருக்கடி என்ன?

ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை YES வங்கியை ஒரு தடைக்கு உட்படுத்தியது மற்றும் YES வங்கி வைப்பாளர்கள் ஒரு மாதத்திற்கு ஒரு கணக்கிற்கு ரூ.50,000-க்கு மேல் திரும்பப் பெற அனுமதிக்க மாட்டாது என்றும் முடிவு செய்தது. இருப்பினும், திருமணம், சுகாதார அவசரநிலை போன்ற நோக்கங்களுக்காக, விதிவிலக்குகள் செய்யப்படலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் வங்கி தனது 20,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான சம்பளத்தையும், வாடகைகளையும் செலுத்த முடியும் என்று அது தெளிவுபடுத்தியது. இது தவிர, YES வங்கியால் எந்தவொரு கடனையோ அல்லது முன்கூட்டியே வழங்கவோ புதுப்பிக்கவோ, எந்த முதலீட்டையும் செய்யவோ, எந்தவொரு பொறுப்பையும் செலுத்தவோ அல்லது எந்தவொரு கட்டணத்தையும் வழங்க ஒப்புக்கொள்ளவோ ​​முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News