Spinach: ஹீமோகுளோபினை இயற்கையாக பெருக்கி ரத்த சோகையை விரட்டும் கீரை!

உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது,  ரத்த அணுக்கள் குறைவதால், ரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. இதனால், நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல், இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 9, 2022, 05:23 PM IST
  • உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது, ரத்த அணுக்கள் குறைவதால், ரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது.
  • சில காய்கறிகள் சாப்பிட்டால் உடலில் இரத்த சோகை என்பதே ஏற்படாது.
Spinach: ஹீமோகுளோபினை இயற்கையாக பெருக்கி ரத்த சோகையை விரட்டும் கீரை! title=

இரத்த சோகை என்பது இரத்தத்தில் உள்ள ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இல்லாததால் உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் போதுமான அளவில் கிடைக்காத ஒரு நிலை ஆகும். நமது உடலில் ஹீமோகுளோபின் குறையும் பொழுது,  ரத்த அணுக்கள் குறைவதால், ரத்த ஓட்டம் உடல் முழுவதும் பாதிக்கப்படுகிறது. இதனால், நமது உடலின் பாகங்கள் சுறுசுறுப்பாக இயங்க முடியாமல், இதனால் உடல் விரைவில் களைப்படைகிறது.

இரத்த சிவப்பணுக்களின் மிகவும் அவசியமான ஒரு அங்கமான ஹீமோகுளோபின் என்பது ஒரு புரதம், கும். இது உடல் முழுவதும் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொள்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, ஆண்களுக்கு  14 – 18 கிராம் என்ற அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் என்ற அளவிலும் இருக்க வேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் பொழுது, இரத்த சோகை என்ற நோய் ஏற்படுகிறது.சில காய்கறிகள் சாப்பிட்டால் உடலில் இரத்த சோகை என்பதே ஏற்படாது.

இரத்த சோகை என்ற நோய் பல நோய்களுக்கு காரணமாக அமைந்து விடுவதோடு, நமக்கு அதிக அளவிலான சோர்வை கொடுத்து, நமது இயல்பான  வாழ்க்கைக்கு பெரிய தடைக் கல்லாக மாறி விடும் சாத்தியம் உண்டு. சில காய்கறிகள் சாப்பிட்டால், உடலில் ரத்த சோகை என்பதே ஏற்படாது. அதில் கீரை தவிர்க்க கூடாத காய்கறியாகும். ஏனெனில் இது ஹீமோகுளீபினை இயற்கையாக பெருக்கி ரத்த சோகையை விரட்டுகிறது. 

மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!

கீரையில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளது. உடலில் இரும்புச்சத்து இல்லாதவர்கள் அதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கீரையை உட்கொள்வதால், இரத்த சோகை நீங்குவதோடு, இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு கீரை ஒரு வரப்பிரசாதம். அதாவது, இதை உட்கொண்டால், உங்கள் இரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News