எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்

Last Updated : Jul 17, 2017, 09:52 AM IST
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் title=

காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியான பாலாகோட், மாஞ்சாகோட் மற்றும் பீம்பெர் காலி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்து உள்ளது. 

கடந்த ஜூன் மாதம் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் 20 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

இதற்கிடையே இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துவிட்டனர் என பாகிஸ்தான் தெரிவித்து உள்ளது. 

Trending News