7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறதா அகவிலைப்படி? 3% உயர்வு எப்போது கிடைக்கும்?

மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் மற்றொரு பரிசைப் பெறக்கூடும். ஜூலை 2021 -க்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்களின் அகவிலைப்படி மேலும் 3 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 04:36 PM IST
  • பண்டிகை காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது.
  • மத்திய அரசு ஊழியர்கள் விரைவில் மற்றொரு பரிசைப் பெறக்கூடும்.
  • அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி கிடைக்கும்.
7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறதா அகவிலைப்படி? 3% உயர்வு எப்போது கிடைக்கும்? title=

7th Pay Commission: பண்டிகை காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி, 17% லிருந்து 28% ஆகவும், வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) 24% லிருந்து 27% ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தவிர மற்றொரு நல்ல செய்தியும் ஊழியர்களுக்காக காத்திருக்கிறது.

அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கும்

மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) விரைவில் மற்றொரு பரிசைப் பெறக்கூடும். ஜூலை 2021 -க்கான அகவிலைப்படி அறிவிக்கப்பட உள்ளது. இதனால் ஊழியர்களின் அகவிலைப்படி மேலும் 3 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 2021 இல் AICPI தரவு, அகவிலைப்படி 31.18 சதவிகிதம் இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியது. ஆனால், டிஏ-வின் கணக்கீடு முழு எண் வீதமாக (round figure) செய்யப்படுகிறது. ஆகையால், அகவிலைப்படி 31% ஆக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

அதாவது, அகவிலைப்படி 3 சதவிகிதம் அதிகரித்தால், ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. அது எப்போது செயல்படுத்தப்படும் என்றும் கூறப்படவில்லை.

அகவிலைப்படி கண்டிப்பாக 3% அதிகரிக்கப்படுமா?

3% அகவிலைப்படி (Dearness Allowance) அதிகரிப்பு பற்றி அரசாங்கம் விரைவில் அறிவிக்கக்கூடும் என்று ஊழியர் சங்கம் நம்புகிறது. AICPI குறியீட்டின் தரவுகளின்படி, ஜூன் 2021 க்கான குறியீடு 1.1 புள்ளிகள் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் குறியீட்டு எண் 121.7 ஐ எட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஜூன் 2021 க்கான அகவிலைப்படி 3 சதவீதம் அதிகரிக்க உள்ளது.

ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு நல்ல செய்தி, ஊதியத்தில் இனி இந்த தொகையும் சேரும்

இந்த மாதம் இது குறித்த முடிவு எடுக்கப்படலாம்

ஊழியர் சங்கத்தின் கோரிக்கையின் காரணமாக, ஜூலை 2021 க்கான அகவிலைப்படி பற்றிய அறிவிப்பு இந்த மாதம் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகின்றது. எனினும், இதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

எனினும், மத்திய அரசு (Central Government) இது பற்றிய அறிவிப்பை செப்டம்பரில் வெளியிட்டு, அக்டோபர் மாத ஊதியத்தில் இதை அளிக்கக்கூடும். இந்த மாதம் அகவிலைப்படி அறிவிக்கப்பட்டால், ஜூலை மாதம் முதல் தற்போது வரையிலான அரியர் தொகையையும் அரசு செலுத்தும் என ஊழியர் சங்கம் நம்புகிறது. ஏனெனில், ஏற்கனவே ஒன்றரை வருட நிலுவைத் தொகை குறித்து எந்த சாதகமான முடிவும் எடுக்கப்படவில்லை.

ALSO READ: 7th Pay Commission: அகவிலைப்படியுடன் இதுவும் அதிகரிப்பதால் ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்!! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News