'அந்த நடிகையின் ஆபாச படம் என்னிடம் உள்ளது...' - அவதூறு வழக்கு போட்ட மற்றொரு நடிகை

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் மற்றும் ஷெர்லின் சோப்ராவின் சர்ச்சை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தி பிக்பாஸ் சீசன் 16 தொடங்கியதில் இருந்து இந்த சர்ச்சையும் தொடங்கியது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 6, 2022, 11:23 AM IST
  • பிக்பாஸ் 16 தொடரில் சஜித் கான் என்ற இயக்குநரால் இந்த சர்ச்சை தொடங்கியது.
  • சஜித் கான் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
'அந்த நடிகையின் ஆபாச படம் என்னிடம் உள்ளது...' - அவதூறு வழக்கு போட்ட மற்றொரு நடிகை title=

இந்தி இயக்குநர் சஜித் கான், பிக்பாஸ் வீட்டிற்கு சென்றதை அடுத்து, அவரை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றும்படி டெல்லி மகளிர் ஆணையம், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியது. தொடர்ந்து, சஜித் கான் மீது #MeToo-வில் புகார் கூறிவந்த நடிகை ஷெர்லின் சோப்ராவும், அவரை பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். 

மேலும், சஜித் கான் தனக்கு அளித்த பாலியல் தொந்தரவுகள் குறித்தும் தடலாடியாக பல குற்றச்சாட்டுகளையும் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, சஜித் கானுக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைக்குள் குதித்தார். அவர் ஷெர்லின் சோப்ராவின் மேல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளையும் வீசினார். அதில், நடிகை ஷெர்லின் பலரையும் பிளாக்மெயில் செய்கிறார் என்றும், அவரின் (ஷெர்லின்) நிர்வாண புகைப்படத்தையும், வீடியோக்களையும் வைத்து பணம் சம்பாதிக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினார். 

மேலும் படிக்க | ஆணுறுப்பை காட்டி மார்க் போடச் சொன்னார் - பிக்பாஸ் போட்டியாளர் மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்!

இதற்கு, நடிகை ஷெர்லின்,"பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பேசுவதற்கு பதிலாக, ராக்கி அவரது வாழ்க்கையில் கவனம் செலுத்தவும்" என பதிலடி கொடுத்தார். தொடர்ந்து, இரு தரப்பிலும் வார்த்தை போர் அதிகமாகியது. 

சில நாள்களுக்கு முன், ராக்கி சாவந்தை கேலி செய்யும் விதமாக, ஷெர்லின் சோப்ரா மிமிக்ரி செய்து வீடியோ வெளியிட்டார். இதனால், தற்போது ஷெர்லின் மீது ராக்கி அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். மேலும், ராக்கி சாவந்த் மற்றும் அவரது வழக்கறிஞரும் நேற்று செய்தியாளரை சந்தித்தனர். 

அப்போது பேசிய அவர்கள், ஷெர்லின் சோப்ரா ஆபாச படங்களை எடுத்தது குறித்து தங்களிடம் ஆதாரம் இருப்பதாகவும்,  ஷெர்லின் சோப்ராவின்  தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்றும் கூறியிருந்தனர்.

மேலும், இந்த சர்ச்சை நெட்டிசன்களுக்கு தீனிப்போடும் வகையில் அமைந்துள்ள நிலையில், அடுத்து ராக்கு வழக்கு தொடர்ந்தது குறித்து ஷெர்லினின் பதிலடியை எதிர்பார்த்து நெட்டிசன்கள் காத்திருக்கின்றனர். 

மேலும் படிக்க | ரஞ்சிதமே... ரஞ்சிதமே... கவனம் ஈர்த்த பாடகி... யார் இந்த மானசி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News