குறைந்த முதலீட்டில் லட்ச கணக்கில் லாபம்! அஞ்சலகத்தின் அட்டகாசமான திட்டம்!

அஞ்சல் அலுவலகத்தில் உள்ள கிராம் சுரக்ஷா திட்டத்தின்படி, மாதம் ரூ.1411 மட்டும் முதலீடு செய்து ரூ.35 லட்சம் வரை பெற முடியும்.

 

கிராம் சுரக்ஷா திட்டம் என்பது அஞ்சல் அலுவலகத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்றாகும்.  இதில் மாதந்தோறும் ரூ.1411 முதலீடு செய்வதன் மூலம் வயது முதிர்ந்த காலத்தில் ரூ.35 லட்சம் வரை பெறலாம்.  இந்த திட்டத்திற்கு பற்றி தெரிந்து கொள்ளவேண்டியவை பின்வருமாறு,

 

1 /4

1) அம்சங்கள் : இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 19-55 ஆண்டுகள் ஆகும், இதில் ரூ.10,000 முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.  இந்தத் திட்டத்தில் பிரீமியங்களை ஒவ்வொரு மாதம், காலாண்டு, ஆறு மாதம் மற்றும் ஒரு ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம். 

2 /4

2. பிரீமியம் மற்றும் வருமானம்: 19 வயது முதலீட்டாளர் 55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால், அவர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியம் செலுத்த வேண்டும்.  58 வயது வரை முதலீடு செய்ய டெபாசிட் தொகை ரூ.1463 மற்றும் 60 வயது வரை முதலீடு செய்ய ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 செலுத்த வேண்டும்.  55 வயதில் முதலீட்டாளருக்கு ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் ரூ.34.60 லட்சமும் கிடைக்கும்.  

3 /4

3. கடன் வசதி : கிராம் சுரக்ஷா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் கடன் வசதி பெறலாம்.  இருப்பினும், இந்த திட்டத்தில் 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு மட்டுமே இது கிடைக்கும்.  

4 /4

4. மற்ற விவரங்கள் : பிரீமியம் தொகையை மாதந்தோறும், காலாண்டு அல்லது ஆண்டுதோறும் டெபாசிட் செய்யலாம், முதலீடு செய்த நாளில் இருந்து பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.  5 ஆண்டுகளுக்கு முன் சரண்டர் செய்தால் முதலீட்டாளர்களுக்கு போனஸ் கிடைக்காது.